Sunday, July 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஆட்டம் போட்டு சோர்ந்த உயிர்கள் இங்கே இரண்டு

நிஜப்பூனை

வீட்டில் பூனையாய்

காட்டில் புலியாய்

நிஜ மங்கை

வீட்டிலும் காட்டிலும் புலியாய்

கடமைக்காக,

உடைமைக்காக

உறக்கத்திற்காக

உழைப்பிற்காக

சிறப்பிற்காக

என்பது அறியாமல் பேசும் தெய்வத்தை 

பேசிக் கொல்லும் உயிர்களும் உண்டு இப்புவியில்


 ஓவியமும் பேசியதே பல கதைகள்

நின்று கேட்கவா?

அமர்ந்து ரசிக்கவா? 

கனவில் இசைக்கவா?

விடை தெரியாத போதும்

எத்தனிக்கிறது மனம்

எதுவென்று அறிய

வருவதும் செல்வதும் 

நிரந்தரம் இல்லாத போது

நடப்பதும் சரியோ?

எட்ட நின்று கேட்கும்

கதைகளும் கூட

பக்கம் வந்து மனதை

வருடுதே

கேட்கும் திறன் இருந்தாலும்

காலமும் கடமையும்

மறுக்குதே

அடுத்த விழி கூட அந்நியமாய் மாறும்

தருணத்தில் அடுத்தவருக்கும் செவி மடுக்குமோ மனதும்

என் மனது அறியவே 

வெகு நாட்கள் ஆகும்

போது அடுத்தவர் மனம் என்னுள்ளே கொள்ள காலங்கள் 

பல வேண்டும்

வேண்டுவது கிடைக்கவே

வேண்டியவன் துணை வேண்டும்

வேண்டுதல் கொண்டாலும் வேண்டாதவை புக வைப்பதும் முறையோ?

சரியோ?

காலமும் அறிந்தவன் அவனும் சொல்ல வேண்டியது நம்மிடம் யாது?

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...