Monday, February 8, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"ஏன்" by Jaya

 


அன்பு (மிகுந்து) இருக்க... (தேவையில்லாத) வம்பு ஏன்??


ஆக்கல் (பல) இருக்க... அழித்தல்கள் (பல) ஏன்??


(மேலான) பண்பு இருக்க...(அகமழிக்கும்) கோபம் ஏன்??


(அரவணைக்கும்) பாசம் இருக்க...

(இழுக்கான) வேசம் ஏன்???


(குறையாத) இயற்கை இருக்க...(சீரழிக்கும்) செயற்கை ஏன்???


(நிலையான) வாழ்விருக்க....

நிலையில்லாத ஒட்டம் ஏன்???


ஏன் ஏன் என்ற கேள்விகளுக்கு

ஏனோ மெளனமே விடையாய்!!!!

ஏன் என்ற கேள்விகளே வாழ்வின் ஓட்டத்துக்கு 

வேராகும் விடைகள் அறிய ஓடினால் வாழ்க்கை

 நமக்கு சீராகும்!!!

1 comment:

  1. ரொம்ப அழகாக இருக்கிறது ஜெயா💜

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...