Saturday, February 13, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"காதல்" by Vidhya Nivash



காதல் எது காதல்..


பல வருடங்களுக்கு முன் திருமணமானவுடன் உருவான கருவிலே கலைந்த முதல் காதலை ...

மறதி எனும் மருந்தால் மறந்தேன்..

மீண்டும் நினைவூட்டியது இந்த கொடிய கொரோனா இந்நாளில்!!!


வாழ்ந்த இடத்தை விட்டு பிரிந்த ஏக்கம் மண்ணின் மீதுள்ள நேசம்..சில தினங்களுக்கு முன் இறந்த பெரியம்மா கொடுத்த சோறு அவருடைய இழப்பை மறக்க முடியாமல் நிமிர்வதற்குள்!!!


கொரோனா கொடுத்த அடுத்த அடி மற்றொரு பெரியப்பா நேற்று..

வேதவல்லி அம்மா கேட்ட அதே கேள்வியை கேட்ட பெரியப்பாவை இழந்த பெரியம்மாவின் தவிப்பு!!!

உடன் பிறந்தவரின் கடைசி நொடிகளில் கூட கலந்துக்கொள்ள முடியாமல் கொரோனாவால் கைகள் கட்டிப்போடப்பட்ட அப்பாவின் தவிப்பு!!!

சிறு வயதில் ஓடி ,ஆடிய சகோதரி ,சகோதரன் சிறு பிள்ளை போல் அழுவுகிறார்கள் !!!தொட்டு அழ முடியவில்லை ,அவர்களுடைய தவிக்கும் பாசம்!!!

தோழனை போலிருந்த தாத்தாவை தேடும் பேரப்பிள்ளைகளின் தேடல்!!!


ஆலமரமாக இருந்த குடும்பத்தில் இரண்டு விழுதுகள் விழ!!!

தோள்களில்க்கூட சாய்ந்து அழ முடியாமல், சொந்தங்களைக்கூட அன்னியமாக்கிய சூழல் !!!அவர்களின் தீர்க்க முடியாத வருத்தம்...


அழுதது போக மீதி எழுத செய்தது இந்த பாசங்கள் ,நேசங்கள்..


உயிரற்ற, உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்கும் இடையே தோன்றும் அன்பின் வெளிப்பாடே காதல்..

ஆறு மற்றும் அறுபதில் வரும் எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பின் வெளிப்பாடு,

காமத்தை கடந்த அன்பின் வெளிப்பாடே

காலத்தை வென்ற காதல்...







10 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...