Sunday, May 8, 2022

 " தாய் " அன்னையர் தின கவிதை by Veena Sankar





 தாய்


அன்று உதிரம் சிந்தி என்னை ஈன்ற-தா(ல்)(ய்) 

இன்று நான் உயிர்  பெற்று நிற்கிறேன்


என் கரம் பிடித்து  என்னை நீ தாங்கிய-தா(ல்)(ய்) 

உன் மனம் குளிர நான் இருக்கிறேன்

 

நீ  ஆசைப்படாமல் வாழ்க்கை நடத்திய-தா(ல்)(ய்) 

நான் மாட மாளிகையில் வாழ்கிறேன்

 

என் தவறுகளை சுட்டிக்காட்டி வளர்த்த-தா(ல்)(ய்) 

நான் சரியான பாதையில் பயணிக்கிறேன்


உன் பாசம் கொண்டு என்னை  வடித்த-தா(ல்)(ய்) 

நான் பரந்த மனதோடு இருக்க விழைகிறேன் 


நீ கனவு  கொள்ள  சொன்னதா(ல்)(ய்)

நான் விரிந்த உலகில் மிதக்கிறேன்


நீ  பொறாமை இல்லாமல் வாழ்ந்த-தா(ல்)(ய்)

நான் உன்னைக் கண்டு பெருமை அடைகிறேன்

 

உன் செயலால் நீ கோபுரத்தில் நின்ற-தா(ல்)(ய்) 

நானும் உன் நிழலாய் இருக்க விரும்புகிறேன்




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...