Sunday, May 29, 2022

உரையாடல்

"உரையாடல்" by Veena Sankar

உரையாடல் எண்பது வயது மதிக்கத் தக்க செவி குறைபாடுடைய பெரியவர் ஒருவர் அலைபேசியில் பேசிய உரையாடல் பின்வருமாறு:



எதிர் முனையாளர்: ஹலோ! 
 பெரியவர்: ஹலோ! யார் வேணுங்க? 
 எதிர் முனையாளர்: சார்! அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன். 
 பெரியவர்: என்னப்பா! அப்பளமா? 
 எதிர் முனையாளர்: அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன். 
 பெரியவர்: என்ன வேணும்? 
 எதிர் முனையாளர்: நீங்கள் அப்போலோவில் ஆர்டர் செய்திருக்கிறீர்களா? பெரியவர்: ஆர்டரா? என்னது? 
 எதிர் முனையாளர்: நான் அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன். நீங்கள் மருந்து ஆர்டர் செய்தீர்களா? 
 பெரியவர்: நான் அப்பளம் ஏதும் ஆர்டர் செய்யவில்லை. 
 எதிர் முனையாளர்: சார்! அப்பளம் இல்லை. அப்போலோ மெடிக்கலருந்து பேசுறேன் நீங்கள் மருந்து ஆர்டர் செய்தீர்களா? 
 பெரியவர்: (சற்று கோபமாக) எத்தனை தடவை சொல்வது? நான் அப்பளம் ஏதும் ஆர்டர் செய்யவில்லை. 
 எதிர் முனையாளர்: சார் அப்பளம் இல்லை. நான் அப்போலோ மெடிக்க -லேர்ந்து பேசுறேன் நீங்கள் மருந்து செய்தீர்களா?
 (தற்போது தான் எதிர்முனையாளர் பேசியதை புரிந்து கொண்ட பெரியவர்) பெரியவர்: ஓ! சாரிப்பா! நீங்கள் அப்போலோ என்று சொன்னது எனக்கு அப்பளம் என்று தவறாக கேட்டு விட்டது. என்ன விஷயம்? 
 எதிர் முனையாளர்: நீங்கள் மருந்து ஆர்டர் சொன்னதில் ஒரு மருந்து கிடைக்கவில்லை. நாளை தான் கிடைக்கும். அதனால் நாளை அந்த மருந்தையும் சேர்த்து கொண்டு வரவா? இல்லை இன்றிருக்கும் மருந்தை மட்டும் கொண்டு வரவா? 
 பெரியவர்: எல்லா மருந்துகளையும் சேர்த்து நாளை கொண்டு வாருங்கள். எவ்வளவு பணம் தேவைப்படும்? 
 எதிர் முனையாளர்: சரி சார். ரூபாய் இரு நூறு ஆகும். நாளைக்கு டெலிவரி பண்ணும்போது பணத்தை வாங்கிக் கொள்கிறேன். 
 இப்படியாக சுவாரஸ்யமான உரையாடல் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...