Friday, May 27, 2022

செக்கச் சிவந்த வானம் என்ன சொல்ல தூண்டுகிறது????

 





 Akhila : காலை வணக்கம் விண்மீன்களே!


செக்கச் சிவந்த வானம் என்ன சொல்ல தூண்டுகிறது???? 


சிந்துங்கள் உங்கள் சிந்தனையை இங்கே!! 

Pic credits: Kumaran


Veena Shankar: வானம் தங்கமாக மாறியது உன் தாக்கத்தால்


Jayanthi: ஒற்றை மரம் கண்டு வெட்க படுகிற வானம்.

இன்னும் இன்னும் மரங்களைக் கண்டால் ஆனந்தமாக வர்ணஜாலம் பொழியும் அல்வா.


 Rishi: உன் வருகை அறிந்து,

என்னை உனக்குள் தொலைத்தேன்...

இப்படிக்கு,

நிலா!!!


 Vidhya Nivash: செக்கச்சிவந்த வானத்தில் தவழ்ந்து வரும் பகலவனை கண்டு வெட்கத்தில் கண்மூடிக்கொள்ளும் மின் விளக்குகள்


 Veena Shankar: பந்து போல் இருந்தாலும் உன்னை கொண்டு விளையாட முடியாது

தங்கம் போல் மின்னினாலும் உன்னை சூட முடியாது

எட்டி பிடிக்காத உயரத்தில் நீ இருப்பதால் உன்னை ஆடையாய் உடுத்திக் கொள்ளவும் முடியாதே

 Veena Shankar: சிறு குழந்தை சாப்பிடும் லாலி பாப் போல சூரியனும் மின் விளக்கு கம்பமும்

 Veena Shankar: நீ எங்களை சுட்டெரித்தாலும் உன் வருகைக்காகவும் காத்திருக்கிறோம் நாங்கள், குடை கொண்டு காகைகளை விரட்டி எங்களின் வடகம் காய

Veena Shankar: கதிரவனின் புன்னகை களத்தை மாற்றுகிறது


Akhila



விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையில் ஓரு சிறு கீற்று தான் பிரிக்கிறது!!


இதற்கிடையில் மானுடம் மூலம் எத்தனை அமர்க்களம் பறக்கிறது!!


வந்தோம்… வாழ்ந்தோம்…சென்றோம் என்றிருந்தால் இயற்கை உன்னை ஆசீர்வதிக்கும்🙏🏻

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...