![]() |
செக்கச் சிவந்த வானம் என்ன சொல்ல தூண்டுகிறது????
சிந்துங்கள் உங்கள் சிந்தனையை இங்கே!!
Pic credits: Kumaran
Veena Shankar: வானம் தங்கமாக மாறியது உன் தாக்கத்தால்
Jayanthi: ஒற்றை மரம் கண்டு வெட்க படுகிற வானம்.
இன்னும் இன்னும் மரங்களைக் கண்டால் ஆனந்தமாக வர்ணஜாலம் பொழியும் அல்வா.
Rishi: உன் வருகை அறிந்து,
என்னை உனக்குள் தொலைத்தேன்...
இப்படிக்கு,
நிலா!!!
Vidhya Nivash: செக்கச்சிவந்த வானத்தில் தவழ்ந்து வரும் பகலவனை கண்டு வெட்கத்தில் கண்மூடிக்கொள்ளும் மின் விளக்குகள்
Veena Shankar: பந்து போல் இருந்தாலும் உன்னை கொண்டு விளையாட முடியாது
தங்கம் போல் மின்னினாலும் உன்னை சூட முடியாது
எட்டி பிடிக்காத உயரத்தில் நீ இருப்பதால் உன்னை ஆடையாய் உடுத்திக் கொள்ளவும் முடியாதே
Veena Shankar: சிறு குழந்தை சாப்பிடும் லாலி பாப் போல சூரியனும் மின் விளக்கு கம்பமும்
Veena Shankar: நீ எங்களை சுட்டெரித்தாலும் உன் வருகைக்காகவும் காத்திருக்கிறோம் நாங்கள், குடை கொண்டு காகைகளை விரட்டி எங்களின் வடகம் காய
Veena Shankar: கதிரவனின் புன்னகை களத்தை மாற்றுகிறது
Akhila:
விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையில் ஓரு சிறு கீற்று தான் பிரிக்கிறது!!
இதற்கிடையில் மானுடம் மூலம் எத்தனை அமர்க்களம் பறக்கிறது!!
வந்தோம்… வாழ்ந்தோம்…சென்றோம் என்றிருந்தால் இயற்கை உன்னை ஆசீர்வதிக்கும்🙏🏻



No comments:
Post a Comment