எழுதி முடித்த புத்தகத்தில்
மீண்டும் இடம் பிடிக்க துடிக்கும் பெண்
புரட்டிப் பார்த்த பின் தான் தெரியும்
அவள் ஏதும் எழுதப்படாத புத்தகம் என்று
சுருட்டி வைத்த புத்தகத்தை
புரட்டிப் பார்த்த போது
தான் விளங்கியது
பத்திகளுக்கிடையே உள்ள
இடைவெளியைக் கூட நிரப்பலாம் என்று
நிரப்பவும் முயசித்த
போது தான் விளங்கியது
இடைவெளி இல்லாத
எதுவும் விளக்குவதில் சிக்கலே என்று

No comments:
Post a Comment