ஆடியில் தெரிவது முகம்
இருவரானதால் அதில் பாகம்
செல்பியில் கொண்ட மோகம்
நெஞ்சில் ஏதோ ராகம்
செயலில் தெரிந்தது தாகம்
எப்போதும் நாம் காணாத ரகம்
வலியில் பிறப்பது சோகம்
வழியில் காண்பது சுகம்
வானம் கொள்ளாதா மேகம்
நிலம் தாராதா போகம்
எப்போதும் அசராத தேகம்
எந்நாளும் எடுக்கும் வேகம்
வீரம் ஒன்று அமைதியாய்
அமைதி ஒன்று வீரமாய்
காண்பது யாது மெய்யா?
ஐயம் கொண்டு காண்கிறது
வீரமும் அமைதியும்
வீரத்தின் அமைதி தாக்கவா?
அமைதியின் வீரம் காக்கவா?
கூர்ந்து நோக்கியதில் விளங்கியது
எதுவும் அமைதி கொள்ளாது
அவரவர் சூழ்நிலையில்
எவரும் சிக்கும் போது
பகைமை கூட நட்பானது கையில் அடக்கமான அலைபேசியால்
தகுதியும் தேவை இல்லை இங்கே
பகுதி நேர பணிக்கு
பசியும் இல்லை இங்கே
மதி புறம் போனதால்
வெகுமதியும் இல்லை இங்கே
வீரம் மறந்து போனதால்

No comments:
Post a Comment