Wednesday, October 2, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஆடியில் தெரிவது முகம்

இருவரானதால் அதில் பாகம்

செல்பியில் கொண்ட மோகம்

நெஞ்சில் ஏதோ ராகம்

செயலில் தெரிந்தது தாகம்

எப்போதும் நாம் காணாத ரகம்

வலியில் பிறப்பது சோகம்

வழியில் காண்பது சுகம்

வானம் கொள்ளாதா மேகம் 

நிலம் தாராதா போகம்

எப்போதும் அசராத தேகம்

எந்நாளும் எடுக்கும் வேகம்


 வீரம் ஒன்று அமைதியாய்

அமைதி ஒன்று வீரமாய்

காண்பது யாது மெய்யா?

ஐயம் கொண்டு காண்கிறது

வீரமும் அமைதியும்

வீரத்தின் அமைதி தாக்கவா?

அமைதியின் வீரம் காக்கவா?

கூர்ந்து நோக்கியதில் விளங்கியது

எதுவும் அமைதி கொள்ளாது

அவரவர் சூழ்நிலையில்

எவரும் சிக்கும் போது

 பகைமை கூட நட்பானது கையில் அடக்கமான அலைபேசியால்

 தகுதியும் தேவை இல்லை இங்கே

பகுதி நேர பணிக்கு

பசியும் இல்லை இங்கே

மதி புறம் போனதால்

வெகுமதியும் இல்லை இங்கே

வீரம் மறந்து போனதால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...