Tuesday, October 15, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: கைகள் சுட்டுக்கொண்டு கற்றுக் கொண்ட பாடம் இங்கே

சுட்டுப் போட்டாலும் வாராது தாயின் கைமணம்

Vidhya Nivash:

 அருங்காட்சியகத்தில் அதிகமாக தேடப்படும் காட்சிப் பொருட்கள்.

 காணமல் போனவர் பட்டியலில் சேர்க்கப்பட்டவை!

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குதே,தண்ணீரின்றி விளைச்சலின்றி சட்டியில என்ன சமைக்க!

அனைத்தும் காட்சி பொருளே ஆனால் சுட்டெரிக்கும் வெயிலும், நெருப்பை போல் எரியும்  பசியும் மட்டும் நிஜமே!

Veena Shankar: பசியின் தேவைக்கான கலன்களின் அணிவகுப்பு இங்கே

வெகு சுதந்திரமாய்

மிக்க வசதியாய்

கிடைக்குமா இன்று?

திரும்பவும் உருவெடுக்குமா இவையும் நாகரீக உலகில்?

 Veena Shankar: பசியின் மணம் அரங்கேறும் இடமும் இதுவோ?

இயற்கையின் பலனில் செயற்கையாக உருவான மனிதனின் வித்தை

அதுவும் விந்தை


தெரிந்து தெளிந்து 

கொண்டதில் பிறப்பு

என்றுமே சமையற்கலை சிறப்பு

Veena Shankar: எத்தனை மாற்றங்கள் 

சமையலிலும் சமையற்கட்டிலும் வந்தாலும்

ஆண் ஆதிக்கம் இல்லா ஓர் இடமே!


பருவம் வரும் முன்னே 


விரும்பினாலும் விருப்பம் இல்லையென்றாலும்

பசிக்கு தேடுவது யாவும் இங்கேயே !


கோபத்தில் சூடான வார்த்தைகளும் பதார்த்தங்களும் பரிமாறப்படுவதும் இங்கே தான்


விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை

சுட்டுக் கற்றோர் சுவையில் சோடை போவதில்லை



பனியிலும் அடுப்படி குளிரை தடுக்குமே


சுட்டுப் படுவதால் மட்டுமே பக்குவம் இங்கேயும் வாழ்க்கையிலும்

 Veena Shankar: விறகடுப்புக்கு ஈடாகுமா ?

 இது அரசர் காலத்து கலைக்கூடமல்ல 

நாம் ஓடி ஒளிந்த இடமே


 ஆயிரம் எண்ணங்கள் வந்தாலும் அம்மாவின் நினைவு பேசும் ஓர் இடம் சமையற்கூடம்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...