Thursday, October 3, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


மீட்டுபவன் எவனோ அவனே அறிவை மீட்பவன்


 கம்பிகள் உள்ள கருவியை கம்பிகளால் இணைந்த பூவை கம்பீரமாக இசை கொடுக்கும் காட்சி


 கரங்கள் மீட்டும் கம்பிகளாய் கருவியும் கயல் விழியாளும் 

இசைப்பது யாவும் இனிமையே 

மீட்டும் விரல்களை பொறுத்து

கம்பிகளும் வளைவது இசையைக் கூட்டவே

கயல் விழியாளும் 

வளைவது உண்மையான காதலுக்கே 

கம்பிகளில் ஈரம் தொட்டால் கருவியும் வீண் தானே?

கயல்விழியாளின் விழியில் ஈரம் தொட்டால்

யார் வாழ்வும் வீண் தானே?

மீளுவதும் மீட்பதும் மனம் பொறுத்தே


இசைக் கருவியும் வசமாகும் மீட்பவரை பொறுத்து

நீளும் இசையில் மீளும் மனதும்

சொர்க்கம் கூட பக்கம் வரும் ரசிப்பு த்

 தன்மையிருந்தால் 

வருவது வரட்டும்

மீண்ட வரை இலாபம் 

துணையின் வெறுமை இங்கே

துணிவாய் மாறியது இசையின் துணையோடு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...