ஆதிக்கம் எதில்
மயக்குவ திலா? மயங்குவதிலா?
யார் யாரால்?
என்ற வினாவும் எழுகிறதே
பொதிந்த வனப்பு யாவும்
வெளிபட்டு நிற்க மறைத்து வைத்த பொருளும் யாது?
இருதயம் பரிமாறப்பட்ட பின்னால்
மற்ற உறுப்புக்கள் யாவும்
அடிமையே!
அடி தொடுபவனுக்கும்
மடியில் கொள்பவனுக்கும்
பிறையுள் சிறையான
மர்மம் விளங்கும் முன்னே
கரங்கள் ஈர்த்தன
வாழ்வை ரசிக்க
சுகத்தை ருசிக்க
வசந்தத்தை வரவேற்க
உணர்வில் மட்டுமல்ல காமம்
இங்கே ஒழுகுகிறது
கண்களிலும்
எவரிடமிருந்து என்று நோக்கையிலே
நேரமும் கரைகிறது

சிறப்பு
ReplyDeleteநன்றி
Delete