Friday, October 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நீர்த்திவலையில் பூத்த பூச்சியா?

கண்ணாடியில் செதுக்கிய கலையா?

தோட்டத்தில் பறக்காமல் மெய் மறந்த நிலையா?

தேடியது கிடைக்குமா?

தேடலில் சுகமும் உண்டு

துக்கமும் உண்டு

அது யாவும் அதன் விளைவில்


 தொட்டால் பறி போகுமா நீர்த்திவலை?

தாகம் தீர்க்க ஒரு பானை தேவையில்லை

ஓர் துளி போதும்

அருந்தினால் குளிர்ச்சி

தவற விட்டால் மண்ணில் சுழற்சி

அதுவே தாவரம் வளர 

பூமியில் ஓர் மலர்ச்சி

அதில் துளிர்க்கும் இலையில் 

காலத்தில் மீண்டும் 

ஓர் நீர்த்துளி

அருந்தவும் முடியாமல்

காக்கவும் முடியாமற்

சிந்தனை கொள்கிறது பூச்சியின் மனமும்

தருணம் சரியென்றால் எதுவும் 

படைக்கும் வரலாறு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...