ரணத்தின் காரணம் தெரிந்தாலும்
மகளிடம் மறைத்து
புன்னகை பூக்கும்
வீரனே, தந்தை
மரணத்தை கூட வென்றிடுவான்
தன் மகளின் புன்னகையை ரசித்தவாறே
தந்தையின் வீரத்தை அறிந்த மகளும்
தன் கிரீடத்தை தந்தைக்கு அணிவித்து
அழகு பார்ப்பதும்
சிறப்பே
பல அம்புகள் உடலில் எய்தியிருந்தாலும்
வம்பு பேசி மகிழும் தந்தை இங்கே
தன் கவலை மறந்து
அவள் பாசத்திற்கு அடிமையாகி
அவள் அழகில் மயங்கி
அவள் பேச்சில் உருகி
அவள் உதிர்க்கும் வார்த்தைக்கு
தன் உதிரத்தை கட்டுபடுத்தி
உயிரை கையில் பிடித்து
கொள்பவனும் தந்தை என்பவனே!
மௌனமும் சிறந்தது
வலியை தாங்கும் போது
புன்னகையும் சிறந்தது
ரணத்தை ஆற்றும் போது
தருணமும் சிறந்தது
மழலை தன்னிடம் அடைக்கலமாகும் போது
தவிப்பும் சிறந்தது
மீண்டும் இது எந்நாளோ என்று நினைக்கும் போது
மனைவி எனும்
அன்பின் விலகலால்
அம்பின் வலி கொண்ட தந்தை

No comments:
Post a Comment