பார்த்தவுடனே கவர்ந்து இழுக்கும் படம்.மெய்யழகன் படத்தை பற்றி எழுத நினைத்தேன்.அதை பார்க்கும் முன்,பலரும் பொழுதுபோக்காக திரைப்படம் பார்ப்பது வழக்கம்.
ஆனால் இந்த படங்கள் நிஜத்தை நிழலில் காட்டியவை. முதலில் வாழை இது அதிகமாக பேசப்பட்டது.ஒரு வாழைப்பழம் தானே என்போம். அது நம் கைக்கு வரும் கதை? ரொம்ப அழகான படம் நட்பு,காதல்,பாசம்,உழைப்பு,கல்வி என அனைத்தும் சேர்ந்த கலவை.அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிக்க, ஒரு மாணவனின் கனவு அதற்கான விலை என்ன? பசி,மானத்திற்கு ஆசைகளும்,கனவும் உணவாகிறது.முதலைகளின் ஆசைக்கு உயிர் பலி.கடைசியில் பார்ப்பவருக்கு மூச்சு முட்டும் ,ஒரு கை சோற்றை வாயிற்கு கொண்டுச்செல்ல எத்தனை ஆசைகளை ,உயிரை கொடுக்க வேண்டியுள்ளது.அதே சமூகத்தில் என்னாப்பா இவ்வளவு விலை,விஷேச நாட்கள் என்றால் ஏற்றிவிடுவீரே!ஒரு ரூபாய்,அதற்கு எத்தனை வலி,என்ன விலை?
அடுத்து கொட்டுக்காளி படம் பெயரே வித்தியாசமாக இருந்தது.இது முழுக்க ஒரு நாள் பொழுது,ஒரு குடும்பத்துடன் நாமும் செல்லும் பயணம்.பேய் பிடித்த பெண்ணை வைத்து நகரும் படம்.முதலில் கதாநாயகனாக வருவரை பார்த்து பாவமாக இருக்கும்.ஒரு கட்டத்தில் தலைக்கு ஏறும் மூர்க்கத்தை பார்க்கும் போதே அவன் நிஜம் தெரியும்.பெண் அடிமைத்தனத்தை சேவல் மற்றும் கதாநாயகியை வைத்தே நகரும் படம்.பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில் அது பலியா? இல்லையா? என நம்மிடமே முடிவு விடப்படுகிறது .மூடநம்பிக்கையை வேர் அறுக்கும் படம்.ஒரு அழகான காட்சி காளை மற்றும் சிறு பெண்ணின் நட்பு,யாருக்கும் அடங்காத காளை அவளுக்கு குழந்தை .இருவரும் அடங்கா விட்டால் சந்தையில் விற்கப்படுவர். இந்த பேய் பெண்ணுக்கு மட்டுமே பிடிக்கிறது ,ஆணுக்கு இல்லை!
அடுத்து கூழாங்கல், இது கரிசல்காட்டு மண்,அதன் உயிரோட்டத்தை காட்டிய படம் இல்லை தாகம்,தாக்கம்.
சிங்கமும்,ஆடும் நண்பர்களாக செல்பி எடுக்கும் காலம் வர,நாமும் பலதை சிந்திக்க வேண்டும்.கல்வி தடையின்றி அனைவரையும் சென்று அடைந்து,அனைவரும் ஒன்றே,யாரும் பலியும் இல்லை,அடிமையும் இல்லை.அதற்கு கல்வி என்ற ஆயுதம் மேலோங்க வேண்டும்.

No comments:
Post a Comment