Thursday, May 15, 2025

கண்ணாடியே by Akhiladevi Kumaran



கண்ணாடியே!

நீ உடைய,

 உருவம் சிதறியது...

 கால், கைகள் பதறியது...

 உன் வில்லைகள் ரத்தத்தை சீண்டியது...

சுவரில் இருக்கும் போது, அழகு காட்டுகிறாய்! 

தவறி இறக்கும் போது, இத்தனை ஆர்ப்பாட்டமா?! 

பலே கள்ளி நீ!

அழகை ஈர்த்து, அழகு பெறுகிறாய்‍! ‍ 

கவனம் அளித்தால், கனிவு..

கவனம் தவறினால், பிரிவா? ‍

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...