கண்ணாடியே!
நீ உடைய,
உருவம் சிதறியது...
கால், கைகள் பதறியது...
உன் வில்லைகள் ரத்தத்தை சீண்டியது...
சுவரில் இருக்கும் போது, அழகு காட்டுகிறாய்!
தவறி இறக்கும் போது, இத்தனை ஆர்ப்பாட்டமா?!
பலே கள்ளி நீ!
அழகை ஈர்த்து, அழகு பெறுகிறாய்!
கவனம் அளித்தால், கனிவு..
கவனம் தவறினால், பிரிவா?

No comments:
Post a Comment