Thursday, May 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


கடலின் ஆழமென்ன

புயலின் வேகமென்ன

அலையின் சீண்டலென்ன 

வாழ்வில் உயிரென்ன

துணையின் துணிவில் 

ஓர் மரத் தக்கையின் பலத்தில் 

ஒட்டு மொத்த இன்னல்களின் 

காட்சியே படமாய்

அலைபேசியில்


அளைல் மிதந்த போதும்

நிலையான காதல்

அரங்கேறும் வேலை

அடுத்த நொடியின் வாழ்வு

தெரியாத போது

இந்நொடிக்காக வாழ்ந்து, மகிழ்ந்து 

இருக்கும் மனமே அருமை


 மிதவை கப்பலிலிருந்து வெளி வந்த 

மிதக்கும் உயிர்கள்

வளியின் வேகத்தை

உணர்ந்தே வழி தேடின

விழி மூடினாலும் 

வலி போவதில்லை

உயிர் மிதக்கும் வேளையிலும்

ஓர் அற்ப சந்தோசம்

அலைகளின் நடுவே

அலைபேசியில் பேச்சிற்கு ஊடே

- Veena 

சாவைக்கூட விட்டுவைக்காமல் செல்ஃபி எடுக்கும் நேரம்..

கவிழ்ந்த கப்பலும் நானும் வரேன் என்று வேகமாக வர.. முறிந்த காதல்! வெள்ளம் வந்து அடித்து சென்றது!

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...