கடலின் ஆழமென்ன
புயலின் வேகமென்ன
அலையின் சீண்டலென்ன
வாழ்வில் உயிரென்ன
துணையின் துணிவில்
ஓர் மரத் தக்கையின் பலத்தில்
ஒட்டு மொத்த இன்னல்களின்
காட்சியே படமாய்
அலைபேசியில்
அளைல் மிதந்த போதும்
நிலையான காதல்
அரங்கேறும் வேலை
அடுத்த நொடியின் வாழ்வு
தெரியாத போது
இந்நொடிக்காக வாழ்ந்து, மகிழ்ந்து
இருக்கும் மனமே அருமை
மிதவை கப்பலிலிருந்து வெளி வந்த
மிதக்கும் உயிர்கள்
வளியின் வேகத்தை
உணர்ந்தே வழி தேடின
விழி மூடினாலும்
வலி போவதில்லை
உயிர் மிதக்கும் வேளையிலும்
ஓர் அற்ப சந்தோசம்
அலைகளின் நடுவே
அலைபேசியில் பேச்சிற்கு ஊடே
- Veena
சாவைக்கூட விட்டுவைக்காமல் செல்ஃபி எடுக்கும் நேரம்..
கவிழ்ந்த கப்பலும் நானும் வரேன் என்று வேகமாக வர.. முறிந்த காதல்! வெள்ளம் வந்து அடித்து சென்றது!
- Vidhya

No comments:
Post a Comment