நெருப்பில் பிறக்கும் வேட்கையும்
சிரிப்பில் பிறக்கும் ஆனந்தமும்
வெறுப்பில் பிறக்கும் வார்த்தையும்
தவிப்பில் பிறக்கும் வேட்கையும்
வெறுப்பில் உள்ள மனம்
நெருப்பை தேடுவதும் உண்டு
இன்னுயிர் மாய்க்க
தன் முடிவை செயல்படுத்திய பின்னே
அறியும் செய்தது தவறு என்றெண்ணி
பொலிவு இழந்த உடலோடும்
களையிழந்த மனதோடும்
வாழ்வது சிரமமே
தேவையில்லாதது மனதில் அடைந்தால்
அதுவும் என் செய்யும்?
பகிர ஆள் இல்லாத மனமும்
தன் ஆழ் மனதில் உதிக்கும் நினைப்போடு தன்
நிகழ்காலத்தையும் தொலைத்து
எதிர்காலத்தை பற்றுவது ஏன்?
திருந்து மனமே!
நெருப்பு என்றும் உஷ்ணம் உமிழும்
நம் தேவையில்லா வார்த்தை போலே
எண்ணமும் செயலும் ஒன்றாக
கலங்கும் கண்களை
துடைத்திடு
உன் சிரிப்பாலே!
புன்னகை ஒன்றே ஆயுதம்
கலங்கிய நீரை தெளிய வைக்கும்
படிகாரக் கள் போலே
-Veena
நெருப்பிடம் விளையாடதே அது
உன்னை விழுங்கும் பேய்!
தொட்ட இடம் எல்லாம்
பற்றிக்கொள்ளும் ,அது போல்
அலைபாயும் எண்ணத்திற்கும்
இரையாகதே அது உன்னை
விழுங்க காத்திருக்கும் நெருப்பு
அதன் முன் அனைத்தும்
சாம்பலாகும்.
- Vidhya

No comments:
Post a Comment