Thursday, May 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நெருப்பில் பிறக்கும் வேட்கையும்

சிரிப்பில் பிறக்கும் ஆனந்தமும்

வெறுப்பில் பிறக்கும் வார்த்தையும்

தவிப்பில் பிறக்கும் வேட்கையும்


 வெறுப்பில் உள்ள மனம்

நெருப்பை தேடுவதும் உண்டு

இன்னுயிர் மாய்க்க

தன் முடிவை செயல்படுத்திய பின்னே

அறியும் செய்தது தவறு என்றெண்ணி

பொலிவு இழந்த உடலோடும்

களையிழந்த மனதோடும்

வாழ்வது சிரமமே

தேவையில்லாதது மனதில் அடைந்தால்

அதுவும் என் செய்யும்?

பகிர ஆள் இல்லாத மனமும்

தன் ஆழ் மனதில் உதிக்கும் நினைப்போடு தன்

நிகழ்காலத்தையும் தொலைத்து

எதிர்காலத்தை பற்றுவது ஏன்?

திருந்து மனமே!

நெருப்பு என்றும் உஷ்ணம் உமிழும்

நம் தேவையில்லா வார்த்தை போலே

எண்ணமும் செயலும் ஒன்றாக

கலங்கும் கண்களை

துடைத்திடு 

உன் சிரிப்பாலே!

புன்னகை ஒன்றே ஆயுதம் 

கலங்கிய நீரை தெளிய வைக்கும்

படிகாரக் கள் போலே

-Veena 

நெருப்பிடம் விளையாடதே அது

 உன்னை விழுங்கும் பேய்!

தொட்ட இடம் எல்லாம்

 பற்றிக்கொள்ளும் ,அது போல்

 அலைபாயும் எண்ணத்திற்கும்

 இரையாகதே அது உன்னை

 விழுங்க காத்திருக்கும் நெருப்பு

அதன் முன் அனைத்தும்

 சாம்பலாகும்.

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...