நகைப்பு இப்போது
இறந்த பின் மட்டுமே
மலரும்
ஏதும் சரியாக இல்லாத போது
இதழில் மட்டுமே
புன்னகை உண்டெனில்
இறப்பே சிறப்பு
புவிக்கு மேல் இருந்து
தான் அடைந்த துன்பத்தை நினைத்து
பூமிக்கு அடியில் புதையுண்ட உடல் சொன்னது
"அமைதியும் சிரிப்பும் உண்டு இங்கே எவரும் தனிமைபட்டதால்"
- Veena
சிரித்த முகத்துடன் இறப்பது
என்பது ஆசிர்வாதம்,
மனநிறைவுடன் எந்த
எதிர்ப்பார்ப்பும்
இல்லாமல் நாட்களை
எண்ணாமல்,நாட்களை
தள்ளிப்போடாமால்,இயற்கையா
ன மரணம் புன்னகையுடன்
முடிந்தால் எவ்வளவு சிறப்பு!
பிறப்பின் அடையாளம் அழுகை
குரல் ..
இறப்பின் அடையாளம் ஏன்
சிரிப்பாக இருக்க கூடாது?
எலும்புக்கூடு என்றுமே
நகைச்சுவையானது அல்ல
நமக்கான அடையாளம்,அது
இல்லையேல் எதுவும்
சாத்தியமில்லை.
- Vidhya

No comments:
Post a Comment