Saturday, May 17, 2025

சமையற்கட்டு by Veena Shankar

 


சமையற்கட்டு 


இவர் கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். இனி வேலைக்கு போக வேண்டாம் என்று. கேட்கிறாரா இந்த மனுஷன். இத்தனை நாள் பிள்ளைகளுக்காக என்று ஒடினோம் . இனியாவது கோயில் குளம் என்று போய் வருவோம் என்றும சொல்லியாச்சு . பிள்ளை சம்பாத்தியமும் இவர் சேர்த்து வைத்த சொத்தும் போறாதா என்ன? 


நல்லா இரண்டு மூணு நாள் ஊர சுத்திட்டு வந்து வயிறு சரியில்லை, கால் வலிக்கிறது என்று பறந்தால் பக்கத்தில் இருக்கும் நான் ஜடமா? அவருக்கு பாடு பார்க்க வேண்டி தானே இருக்கு. தைலத்தை போடுவதும் கடும் டீ போட்டு கொடுக்கிறதும் என எனக்கும் சேர்த்தே வேலை வெச்சுடறாரு. பையன் கல்யாணமாகி வெளிநாட்டுக்கு போனதும் பொண்ணுக்கும் வரன் பார்க்க ஆரம்பிச்சோம். ஆனா இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் நாம் சொல்றத எங்கே கேட்கறதுகள். மேலே படிக்கணும் மேலே படிக்கணும் ன்னு சொல்லி வயசை அதிகமாக்கிடுதுகள். அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை நம்மை இழுக்க அது எங்கே புரியறது? இவர் ஆபீஸ் வேலைன்னு போக பொண்ணு படிக்க போக, நான் மட்டும் தனியா டிவி பார்க்க முடியுமா? செல் போன் வேற வாங்கி கொடுத்துருக்கா? அது என்ன எனக்கு துணையாவா இருக்கு. சொல்லப்போனால் வெறும் தண்டம் தான் அது நல்லது இருந்தாலும் அதுல கெடுதல் தான் அதிகம். எல்லாமே போர் அடிக்கறது.  


எல்லாம் என் தலை எழுத்து. சரி , நீங்க ரெண்டு பேரும் இருக்குறதால தான் நான் நிம்மதியா இருக்கேன் என சொல்லிக் கொண்டே சமையல் அறைக்கு போய் ஒரு கையில் கரப்பான் பூச்சி மருந்தையும் மறு கையில் துடைப்பத்தையும் ஏந்தி கரப்பானையும் எலியையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தாள் கமலா. என்னதான் எலியை ஒழிக்க பல மருந்துகள் கண்டுபிடித்திருத்திருந்தாலும் அதை அவள் கையால் பிடித்து கொல்லுவது கமலாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் வீரா வேசத்தை காட்டும் இடம் சமையற்கூடம் மட்டுமே. ஒன்று ருசியாய் சமைத்து போடுவது, மற்றொன்று ருசியில் மயங்கி தினமும் இரவில் சாப்பிட வரும் அவைகளை கொன்று குவிப்பது. 


பசியில் ருசியறியாது , அதனால் உயிர் போவதும் தெரியாது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...