Friday, May 2, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


பெண் மயிலின் மையலால்

உருவான மயில் இது

தலைமயிர் தவழும் இடத்தில்

ஓர் ஆக்கிரமிப்பு சத்தமில்லாமல்

அடுத்த பெண்டிரின் கயல் விழிக்கு புதிதாக

ரசிக்கும் ஆடவரின் பார்வைக்கு பரிசாக

நிஜ மயில் தோகை விரிக்க மறுக்க

குலமயில் இடம் கொடுக்க

கற்பனையில் உதித்த

சித்திரத்தில் உருவம்

உயிர்பெற்றது புற முதுகில் 

நாகரிகத்திலும் நளினம் வெளிப்பட்டது வெளியிலும்

வேலைபாட்டிலும்


அழகு பெண் மயில் கூந்தல் முடிய

ஆனந்த மயில் நான் தோகை விரிக்க

இன்றளவும் மயில் பெண்ணை கவர

ஈதென்ன உறக்கம் என காளை விழிக்க

உன்னால் அரங்கேற்றிய கலையை 

ஊரறிய காட்டுவேன் பகட்டை நானும்

என்னாலும் எந்நாளும் முடியுமே

ஏடு கூட மேடை ஏறும் தானே என்ற

ஐயப்பாடு கூட இல்லாமல்

ஒட்டியே பிணைந்தேன் கன்னியின் பின்னாலே பின்னலை 

ஓரமாய் தள்ளி விட்டு

புறமுதுகு காட்டினாலும் வெற்றி என்பது என் வசமே

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...