Monday, May 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 உருவ வலிமை பெரிதல்ல

சூழ்நிலைக்கேற்ப திறமையே சிறப்பு


 வாழ்வு எனும் ஓட்டத்தில் முன் பின்

இருந்தாலும் ஓட்டம் என்பது மாறாது


 ஒருவர் உண்பதை இன்னொருவர் விரும்பார் 

ஒருவரின் வலிமை இன்னொருவர் அறியார்

ஒருவரின் குணம் இன்னொருவர் மதியார்

ஏன் இந்த ஓட்டம்?

பசி ஒன்று உயிரை மாய்த்து விடும் 

பட்டினிக் கிடந்தால்

இல்லை

மாய்க்க வைக்கும் அடுத்தவரின் உயிரை

பட்டினிக்கு இரையாக

 ஓட்டம்.

வயிற்று பசி ஓட்டத்தில் வேகம் இல்லை உயிர் பசி ஓட்டத்திடம்.


 எதற்காக ஓட்டம்?

பசிக்காகவா?

ருசிக்காகவா?

வீரத்திற்காகவா?

வாழ்விற்காகவா?

பயத்திற்காகவா?

- Veena

வேட்டையில்  விரைவு

இரையின் விவேகம்

எது முந்தும்

ஒன்று உடலை வளர்க்க 

மற்றொன்று உயிரை காக்க 

வெல்வது உயிர் வாழும் !

- Vidhya 




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...