உருவ வலிமை பெரிதல்ல
சூழ்நிலைக்கேற்ப திறமையே சிறப்பு
வாழ்வு எனும் ஓட்டத்தில் முன் பின்
இருந்தாலும் ஓட்டம் என்பது மாறாது
ஒருவர் உண்பதை இன்னொருவர் விரும்பார்
ஒருவரின் வலிமை இன்னொருவர் அறியார்
ஒருவரின் குணம் இன்னொருவர் மதியார்
ஏன் இந்த ஓட்டம்?
பசி ஒன்று உயிரை மாய்த்து விடும்
பட்டினிக் கிடந்தால்
இல்லை
மாய்க்க வைக்கும் அடுத்தவரின் உயிரை
பட்டினிக்கு இரையாக
ஓட்டம்.
வயிற்று பசி ஓட்டத்தில் வேகம் இல்லை உயிர் பசி ஓட்டத்திடம்.
எதற்காக ஓட்டம்?
பசிக்காகவா?
ருசிக்காகவா?
வீரத்திற்காகவா?
வாழ்விற்காகவா?
பயத்திற்காகவா?
- Veena
வேட்டையில் விரைவு
இரையின் விவேகம்
எது முந்தும்
ஒன்று உடலை வளர்க்க
மற்றொன்று உயிரை காக்க
வெல்வது உயிர் வாழும் !
- Vidhya

No comments:
Post a Comment