Monday, May 26, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 


மண்ணை பிளந்து இதயத்தை தொட்ட மலர்கள்

காண்பதற்கு அருமை

கண்களுக்கு ஆளுமை

மனதிற்கு குளுமை


 நேர்த்தியாய் பராமரிக்கப்பட்ட ஓர் ஓவியம்

மண்ணுக்கும் விண்ணுக்கும்

காட்சியாய் 

அதன் சிறப்புக்கு சாட்சியாய்


 மண்ணை பிளந்து வந்த விதை

கண்ணுக்கு அழகோவியம் அதன் பசுமையில்

பசுமை மாறி உதிர்ந்தாலும் தன் வாழ்விற்கு அர்த்தமாய் 

விட்டு செல்கிறது மீண்டும் பல விதைகளை

- Veena Shankar 

மனதில் தொலைத்ததை

 மண்ணில் விதைத்து அழகு

 பார்க்கிறோம்!

மண்ணில் தொலைத்ததை

 எங்கே விதைத்து மனிதம்

 தேடுவோம்!

மனிதனை ஆளுவதை விட

 மண்ணை ஆளுவது மேல் என்று

அழகுசின்னம் ஆன இதயம்!

எல்லையில்லாமல் படர்ந்து

 செல்லும் அழகு கொடியை மலர்

 வளையம் ஆக்கிய இதயம்..

- Vidhya Nivash 


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் 

என்பது போல மனிதருக்கு மட்டுமல்ல 

எங்களுக்கும் அன்பின் வெளிப்பாடு 

இதயம் வழியே......... 


--பிரியா

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...