மண்ணை பிளந்து இதயத்தை தொட்ட மலர்கள்
காண்பதற்கு அருமை
கண்களுக்கு ஆளுமை
மனதிற்கு குளுமை
நேர்த்தியாய் பராமரிக்கப்பட்ட ஓர் ஓவியம்
மண்ணுக்கும் விண்ணுக்கும்
காட்சியாய்
அதன் சிறப்புக்கு சாட்சியாய்
மண்ணை பிளந்து வந்த விதை
கண்ணுக்கு அழகோவியம் அதன் பசுமையில்
பசுமை மாறி உதிர்ந்தாலும் தன் வாழ்விற்கு அர்த்தமாய்
விட்டு செல்கிறது மீண்டும் பல விதைகளை
- Veena Shankar
மனதில் தொலைத்ததை
மண்ணில் விதைத்து அழகு
பார்க்கிறோம்!
மண்ணில் தொலைத்ததை
எங்கே விதைத்து மனிதம்
தேடுவோம்!
மனிதனை ஆளுவதை விட
மண்ணை ஆளுவது மேல் என்று
அழகுசின்னம் ஆன இதயம்!
எல்லையில்லாமல் படர்ந்து
செல்லும் அழகு கொடியை மலர்
வளையம் ஆக்கிய இதயம்..
- Vidhya Nivash
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
என்பது போல மனிதருக்கு மட்டுமல்ல
எங்களுக்கும் அன்பின் வெளிப்பாடு
இதயம் வழியே.........
--பிரியா

No comments:
Post a Comment