Saturday, November 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


உடலால் சிறைப்பட்ட 

மனம் வெளிச்சத்தை

கண்டவுடன்

 நாணுகிறது 

ஏங்குகிறது

புது உறவிற்காக 

நிரந்தரமாய் தன்னை

கொள்பவன் எவனோ

அவனிடம் அடிமைப்பட்டு நிற்க

சிறையில் அடைந்து கொள்ள

காதல் ஓர் ஆயுதமல்ல

எவரையும் தன் வயப்படுத்த

ஓர் உணர்வு அது

இது நாள் வரை

கண்டது காதல் அல்ல

உணர்வும் அல்ல

அங்கங்களின் சங்கமம் தானே!

மனங்கள் சங்கமிக்க

வாய்ப்பும் இல்லை

தேவை முடிந்த பின்

எதுவும் பெரிதில்லை

இருட்டும் பகலும் ஒன்றே!

கட்டிலும் சல்லாபமும் ஒன்றே!

இன்பம் பெறும் மனிதர்களை தவிர

கையில் பணத்தோடு

வருபவன்

தாலியோடு வந்தால்

அவள் மனமும் 

ஏற்காதா என்ன?

வலியோடு பிறக்கும் தாகம் தீர்க்க

வழி உண்டு இங்கே

வாயில் வரை மட்டும்

இன்றோ பிறந்தது

நாளைய மறைமுக

தேவைக்காக!

- Veena 

கண்களை மூடி நினைவை அசை

 போட வரும் சிரிப்பு ,மழை நின்ற

 பின் சொட்டும் நீர் தேனை போல்

 அழகு,நாணத்தில் சிவக்கும்

 கன்னங்களை போல் அழகு,

 மொட்டு அவிழ்க்கும் இதழை விட

 அழகு அவள் சிரிப்பு ..

- Vidhya 



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...