Wednesday, November 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காலத்தினால் பல பாதைகள்

உண்டென்றாலும் 

ஓர் பாதையே

சரியான பாதையாய் 

நம்மை இட்டு செல்லும்

அதன் வழி பின் தொடர

மேடுகளும் உண்டு

பள்ளங்களும் உண்டு

வளைவுகளும் உண்டு

நிறுத்தங்களும் உண்டு

அதை கடந்து போவதே சிறப்பு

வாழ்விலும் இது

பொருந்துமே 

அறிய துடிக்கும் வயதில்

அறிவதும்

தேட பணிக்கும் வயதில்

தேடலும்

ஒருவருக்கான வாழ்வியலையும் 

கற்றுக் கொடுக்கும்

சீரான பாதையின் முடிவு மட்டுமே

கொடுக்கும் செழிப்பான வாழ்க்கையை

அதை கண்டு கொள்வதும்

அமைத்துக் கொள்வதும் 

நம் கையிலே!

- Veena 

ஒவ்வொரு வளைவிலும் ஒரு

 குதூகலம் ,அதில்

 பயணப்படுவோருக்கு ஒரு

 புதுவிதமான அனுபவம் ,அதை

 வழிநடத்துபவருக்கே தெரியாது

 அதன் ஆபத்து ,எதையும்

 எதிர்கொள்ளும் தைரியத்தை

 பயணங்கள் மட்டுமே தரும்

 அதிலும் மலை பயணங்கள் பல

 விசித்திரமான கதைகளையும்,

 அதில் வசிக்கும் உயிரினத்தின்

 துடிப்பையும் கண்ணில் காட்டி

 செல்லும்,வளைவு ஒரு புதிர் .

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...