காலத்தினால் பல பாதைகள்
உண்டென்றாலும்
ஓர் பாதையே
சரியான பாதையாய்
நம்மை இட்டு செல்லும்
அதன் வழி பின் தொடர
மேடுகளும் உண்டு
பள்ளங்களும் உண்டு
வளைவுகளும் உண்டு
நிறுத்தங்களும் உண்டு
அதை கடந்து போவதே சிறப்பு
வாழ்விலும் இது
பொருந்துமே
அறிய துடிக்கும் வயதில்
அறிவதும்
தேட பணிக்கும் வயதில்
தேடலும்
ஒருவருக்கான வாழ்வியலையும்
கற்றுக் கொடுக்கும்
சீரான பாதையின் முடிவு மட்டுமே
கொடுக்கும் செழிப்பான வாழ்க்கையை
அதை கண்டு கொள்வதும்
அமைத்துக் கொள்வதும்
நம் கையிலே!
- Veena
ஒவ்வொரு வளைவிலும் ஒரு
குதூகலம் ,அதில்
பயணப்படுவோருக்கு ஒரு
புதுவிதமான அனுபவம் ,அதை
வழிநடத்துபவருக்கே தெரியாது
அதன் ஆபத்து ,எதையும்
எதிர்கொள்ளும் தைரியத்தை
பயணங்கள் மட்டுமே தரும்
அதிலும் மலை பயணங்கள் பல
விசித்திரமான கதைகளையும்,
அதில் வசிக்கும் உயிரினத்தின்
துடிப்பையும் கண்ணில் காட்டி
செல்லும்,வளைவு ஒரு புதிர் .
- Vidhya

No comments:
Post a Comment