நானும் கடலும்
கடன் வாங்கி வலை வாங்கி
காற்றின் திசையில்
என் படகு அசைந்து
எதிர்நீச்சல் போட்டு
கடலில் மிதந்து மீன் பிடித்து
தரை இறக்கி
விலை சொல்லி
பேரம் முடிந்து
வியாபாரம் செய்து
ஈட்டிய பணத்தை
வட்டிக்கும் அசலுக்கும் கட்டி
மிச்ச மீதியை
இல்லத்தாயிடம் கொடுத்து
என்னை
விதைத்தவளுக்கும்
விதைத்ததுகளுக்கும்
செலவாக்கி
செய்த பாவத்தை
தொலைக்கவும்
ஒதுக்கி
நான் காலத்தை ஓட்ட
சுனாமி அலைகள்
என் வாழ்வை சிதைக்க
என் இருப்பிடமும்
உடையவர்களையும்
உடமையையும்
கடல் அன்னை
பறிக்க
நான் மட்டும் இருந்து
என்ன செய்ய?
என்று கேட்கிறது என் மனம்
நாங்கள் ருசிக்க நீ
மீன் பிடித்து தர வேண்டும்
என்றது எங்கிருந்தோ
கேட்ட குரல்
- Veena
சில நேரங்கள்ல ஏமாற்றம் நம்மை
கோழையாக்கும்,
அன்பைக் காட்டி அடிமைகளாக ,
நம்பிக்கையில்லாத சூழல்,
வெறுமை,தனிமை கொடுமை.
பல நேரத்துல தனிமையே,
சிந்திக்க ,தனக்கென கிடைக்கும்
ஆறுதல்,வெளியே கிடைக்கா
மருந்து.
- Vidhya

No comments:
Post a Comment