Friday, November 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhy

 


நானும் கடலும்


கடன் வாங்கி வலை வாங்கி

காற்றின் திசையில் 

என் படகு அசைந்து

எதிர்நீச்சல் போட்டு

கடலில் மிதந்து மீன் பிடித்து

தரை இறக்கி

விலை சொல்லி

பேரம் முடிந்து 

வியாபாரம் செய்து

ஈட்டிய பணத்தை

வட்டிக்கும் அசலுக்கும் கட்டி

மிச்ச மீதியை

இல்லத்தாயிடம் கொடுத்து

என்னை

விதைத்தவளுக்கும்

விதைத்ததுகளுக்கும்

செலவாக்கி 

செய்த பாவத்தை

தொலைக்கவும் 

ஒதுக்கி 

நான் காலத்தை ஓட்ட

சுனாமி அலைகள்

என் வாழ்வை சிதைக்க

என் இருப்பிடமும்

உடையவர்களையும்

உடமையையும்

கடல் அன்னை

பறிக்க

நான் மட்டும் இருந்து

என்ன செய்ய?

என்று கேட்கிறது என் மனம்

நாங்கள் ருசிக்க நீ

மீன் பிடித்து தர வேண்டும் 

என்றது எங்கிருந்தோ

கேட்ட குரல்

- Veena 

சில நேரங்கள்ல ஏமாற்றம் நம்மை

 கோழையாக்கும், 

அன்பைக் காட்டி அடிமைகளாக , 

நம்பிக்கையில்லாத சூழல்,

 வெறுமை,தனிமை கொடுமை. 

பல நேரத்துல தனிமையே,

 சிந்திக்க ,தனக்கென கிடைக்கும்

 ஆறுதல்,வெளியே கிடைக்கா

 மருந்து.

- Vidhya

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...