Sunday, November 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மனதின் இனிய நினைவிற்கு பசுமை காட்சியாய் 

விலகி நிற்கும்

நினைவுகள் பட்டுப்போன மரமாய்

ஓர் மரத்தில் காயும்

பழமுமாய் விளைவது போல


 வாழ்ந்து முடித்தவனின் தியாகத்தால்

வாழப் போகிறவனின்

 வாழ்வில் என்றும் வசந்தமே!


 பட்டு போன மரம் 

துயில் கலைந்து 

துளிர்த்தது

மனிதனின் தேவைக்காக

- Veena 

இரண்டுமே அழகே

ஒன்றின் பசுமையை போலவே

 முதுமையும் அழகே,

வெகுளிதனம் ,பக்குவம்

 இரண்டுமே தேவை,

நேரத்திற்கும், காலத்திற்கும்

 இடையில் விளையாடும் ஜாலம்,

ஆனால் இரண்டையும் ரசிக்க

 இல்லை மனமே,கணமே..

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...