மனதின் இனிய நினைவிற்கு பசுமை காட்சியாய்
விலகி நிற்கும்
நினைவுகள் பட்டுப்போன மரமாய்
ஓர் மரத்தில் காயும்
பழமுமாய் விளைவது போல
வாழ்ந்து முடித்தவனின் தியாகத்தால்
வாழப் போகிறவனின்
வாழ்வில் என்றும் வசந்தமே!
பட்டு போன மரம்
துயில் கலைந்து
துளிர்த்தது
மனிதனின் தேவைக்காக
- Veena
இரண்டுமே அழகே
ஒன்றின் பசுமையை போலவே
முதுமையும் அழகே,
வெகுளிதனம் ,பக்குவம்
இரண்டுமே தேவை,
நேரத்திற்கும், காலத்திற்கும்
இடையில் விளையாடும் ஜாலம்,
ஆனால் இரண்டையும் ரசிக்க
இல்லை மனமே,கணமே..
- Vidhya

No comments:
Post a Comment