Tuesday, November 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


சிறகு இருந்தும் பறவாத பறவையும்

மொட்டுக்கள் கொண்டும் பூக்காத பூவும்

எது சுதந்திரம் என்று 

அறியாத பெண்ணும்

மாயை இவ்வுலகில்

தனக்கு தேவையானதை

பெற தெரியாமல்

அடிமை கோலம் பூண்டும்

ஆணின் தோளுக்கு உறுதுணையாய் 

நிற்பவளும் அவளே!

கால்கள் இல்லாவிட்டால் என்ன 

கரங்கள் உண்டு

கரங்கள் இல்லாவிட்டால் என்ன 

கால்கள் உண்டு இங்கே

என்று சொல்லி 

மாற்று அவள் நிலையை

- Veena 

மாயாஜால மந்திரமோ

தந்திரமோ மெல்ல மெல்ல உடல்

 மறைய காற்றில் மிதக்கும் சருகு

 போல் பறக்கும் பெண்ணே,

 எதுவும் பூமிக்கு பாரமில்லை

அதை நீ இழக்காத வரை, மேலே

 பறக்க அது  மேலும் உந்துதே !

பறவையோடு போட்டியிட அவள்

 செய்யும் ஒத்திகை..

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...