சிறகு இருந்தும் பறவாத பறவையும்
மொட்டுக்கள் கொண்டும் பூக்காத பூவும்
எது சுதந்திரம் என்று
அறியாத பெண்ணும்
மாயை இவ்வுலகில்
தனக்கு தேவையானதை
பெற தெரியாமல்
அடிமை கோலம் பூண்டும்
ஆணின் தோளுக்கு உறுதுணையாய்
நிற்பவளும் அவளே!
கால்கள் இல்லாவிட்டால் என்ன
கரங்கள் உண்டு
கரங்கள் இல்லாவிட்டால் என்ன
கால்கள் உண்டு இங்கே
என்று சொல்லி
மாற்று அவள் நிலையை
- Veena
மாயாஜால மந்திரமோ
தந்திரமோ மெல்ல மெல்ல உடல்
மறைய காற்றில் மிதக்கும் சருகு
போல் பறக்கும் பெண்ணே,
எதுவும் பூமிக்கு பாரமில்லை
அதை நீ இழக்காத வரை, மேலே
பறக்க அது மேலும் உந்துதே !
பறவையோடு போட்டியிட அவள்
செய்யும் ஒத்திகை..
- Vidhya

No comments:
Post a Comment