Thursday, November 6, 2025

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


வழி தேடுவதற்கான வரைபடத்தின்

வழி காட்டுதலின் படி

சென்றவர் 

மரத்தில் ஏறியது ஏறினோம்

இரண்டு இளநீர் பறிக்க நினைத்ததால்

இந்த காட்சி

வரைபடத்தின் வழிகாட்டுதலில்

வழி தவற விட்டாலும்

தாகம் தீர்த்தது

- Veena 

நிழல் செல்லாத உயரத்தில்

 இவன் வாசம்..

எவர் கையிலும் நானே எதை

 செய்யும் முன் என்னை

 கேட்காமல் யாரும் எதையும்

 செய்வதில்லை,இல்லையேல்

 கைக்கு எட்டியது வாய்க்கு

 எட்டாது.

- Vidhya 

என் எண்ணத்தின் வண்ணமே

படபடவென வளர்ந்த பட்டாம்பூச்சியே !!


என் அறிவினை ஊற்றி

உனக்கு செயற்கை நுண்ணறிவு சேர்த்திடுவேன்


ஆய கலைகள் அறுபத்து நான்கையும்

அரை நொடியில் உனக்குள் புகுத்திடுவேன் !!


பால்வெளியின் நீளம் முதல்

அந்திரொமேடா தூரம் வரை

அனைத்தையும் உனக்கு

அத்துபடி ஆக்கி வைப்பேன்


நீ பூமிக்கு புதிதாய் வந்த அயலான் !!


எஞ்சிய ஏழாம் அறிவு அதிசயத்தின்அடுத்த கட்டம்


பல்லாங்குழியும் பொய்க்கால் குதிரையும்

விளையாடும் போது அறியவில்லை


இந்த உலகம் என் கையடக்கமென்று


உனக்கு உணர்வு ஊட்டப்பட்டிருந்தால்

என்னுடன் உறங்கி இருப்பாய்


எதிர்காலத்தில் நடக்குமோ என்னவோ?


என் வீட்டில் யாரையும் நான் விட்டதில்லை

உன்னை மட்டுமா?


அலெக்சா.....ஒரு ஹாஃப் பாயில் போடு


—பிரியா


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...