அவள் எழுதிய புத்தகத்தில்
மடல்கள் விரிந்தன
தன் அவன், அவன் அவன் என்றே!
ஒவ்வொருவரின் நினைவும்
மனதில் பசுமையாய் பதிய
அவள் வரைந்த காகித
மடல்களும் நிரப்பின
புத்தகத்தின் பக்கங்களில் காவியமாய்
அவள் அழகை மட்டும்
ரசித்தவர்கள்
அவள் அங்க ஊனத்தை
கண்டு விலகியதும் ஏனோ?
மனதில் ஊனம் இல்லாத
போதும் அது மௌனம்
மட்டுமே காத்தது
ஊமை போல்
யாதும் பாலின் நிறம்
என்ற எண்ணம்
அவள் வாழ்வை
புரட்டி போட்டதே!
கற்ற பாடத்தை மறந்து
வகுப்பில் புதிதாய்
கற்கும் மாணவன் போலே
அவள் இருக்க
மீண்டும் மீண்டும்
பாடம் புகட்டாமல்
அவள் உடல் நிலையை
ஏற்று
மௌனத்தை கலைப்பவனும் எவனோ?
- Veena
எது ஊனம்?
காதலை வெளிப்படுத்த தெரியாத மனமே..
காதல் நிறைந்த மனதில் வேறென்ன
வேண்டும்,சிந்தனை முழுவதும் அவனே
ஆட்க்கொள்ள, எதனை படிக்க, அவனை
நேசிக்க இந்த புத்தக துணை வேண்டுமோ!
அவன் வாழும் இடத்தில் எதுவும் நுழைய
மறுக்க,
மறுக்க மறுக்க படித்தும் புரிய வில்லை..
- Vidhya

No comments:
Post a Comment