பாத்திரத்தில் சமைத்த
பதார்த்தங்கள்
பந்தியிலே!
பந்தியில் இட்ட
மிச்சமும் தொட்டியிலே!
தொட்டியில் தன் பசியை
தீர்க்கும் மனிதன்
கொஞ்சம் மிச்சமும்
வைத்தான் வாயில்லா
ஜீவன்களுக்காக
கண் பார்க்க கை
வேலை செய்யும்
சமைப்பதிலும்
அதை சுவைப்பதிலும்
இடம் வெவ்வேறானாலும்
- Veena
பசி என்ற ஈர் எழுத்து தன்னிலை
மறக்க செய்யும், அரை
ஜான் வயிறு பொறுக்கா பசியால்
பற்றி எரியும் தீப்போல
தன்னையும் ,பிறரையும்
கொல்லும்..
பசி அறிந்து உண்ண சுகம்
பெறும் மனமும்
உடலும்,இல்லையேல்
கட்டுக்கடங்காத நோய்!
பசியில் வருவோருக்கு ஆதரவு
குப்பைத்தொட்டி,
ருசியில் உண்டு மண்டும் இடம்
மருத்துவமனை,
மிதமிஞ்சி உண்பதை விட
பகிரிந்து அளித்தால் இந்த
அவலம் இல்லையேல்...
- Vidhya

No comments:
Post a Comment