இடம் மாறும் பூக்கள்
சில நேரங்களில்
தேவைக்காக
பாசத்திற்காக
காதலுக்காக
அன்பிற்காக
அழகிற்காக
அர்ச்சனைக்காக
அழைப்பிற்காக
ஆதரிப்பதற்காக
ஆராதனைக்காக
சமாதானத்திற்காக
சுகத்திற்காக
இறைக்காக
இறப்பிற்காக
மனதார இதை கொடுப்பதில் உள்ள ஆனந்தம்
பெறுவதில் குறைவே
மலர்கள் மட்டும்
விதி விலக்கு இங்கே
- Veena
மல்லிகையின் மணம்
மாமானுக்கு தெரியுதோ
இல்லையோ, அதை சூடும்
மல்லிகாவின் மனம் அவனுக்கு
புரிந்தால் போதும்!
மலர்களின் மொழி மௌனம்
அதன் மணம் கலைக்கும்
மனதின் மௌனத்தை..
- Vidhya

No comments:
Post a Comment