Saturday, January 30, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"குழந்தைத்தனம்" by Vedhavalli Ramani

 


இன்று அருண்,அனிதா வந்து விளையாடி நேரம் போனதே தெரியவில்லை.நாமும். இந்த வயதில் செய்தது நினைவில் வந்தது. இவ்வளவு ஆண்டுகள் பட்ட துன்பங்கள்.இன்பங்களை அசை போட்ட மனது இனி குழந்தைகளைப்போல் குதூகலமாக எதையும் நினைக்காமல் இருக்க என்னுள் இருந்த குழந்தை மனம் திரும்ப எழுந்து கொண்டது.



அணையா விளக்கு by Veena Shankar

 




கல்கின் "பொன்னியின் செல்வன்" சுருக்க விளக்கம் முடிவு by Vidhya Nivash

 


இதற்கிடையில் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இளவரசர் இறந்துவிட்டார் என்ற செய்தி தஞ்சை வரை சென்று விடுகிறது.


சுந்தர சோழர் மகளை அழைத்து அவருடைய வாழ்நாள் ரகசியத்தை புலம்புகிறார். என்னுடைய இளமைப் பருவத்தில் இலங்கைக்கு படையெடுத்து சென்றிருந்தபோது அங்கு காட்டிலிருந்த ஒரு ஊமை பெண்ணை தான் காதலித்ததாகவும், அவளுக்கு வாக்குகொடுத்துவிட்டு வந்தாகவும் இங்கு அரசு பொறுப்பேற்பதற்கு உன்னுடைய தாயை திருமணம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பிறகு நீங்கள் எல்லாம் பிறந்து விட்டீர்கள். பொன்னி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பொன்னி நதியே காப்பாற்றியதால் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படுகிறான் உன்னுடைய தமையன் ஆனால் அன்று அவனை காப்பாற்றியது அந்த ஊமைப் பெண் .அன்றிலிருந்து தான் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் சில காலங்களாக அவள் வந்து என்னை பயம் மூட்டுகிறாள். அன்று அவளை பிரம்மராயர் விட்டு பின்தொடர செய்தேன் கலங்கரை விளக்கத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. அந்த பெண்ணின் உருவம் என்னை பாடாய் படுத்துகிறது என்று வருத்தப்பட்டார்.


இதை குந்தவை வானதி இடம் சொல்லி கொண்டிருக்கும்பொழுது வானதி தற்செயலாகச் சொன்னால் இரவில் நந்தினி மன்னரை பயமுறுத்துவதாக நேரடியாகவே பார்த்ததாகவும் கூறினாள்.


நந்தினி அன்று வந்தியதேவன் உடன் கேட்ட உதவி இதுதான் எப்படியாவது உன்னுடைய தலைவனான ஆதித்ய கரிகாலனை கடம்பூர் அரண்மனையில் தான் சந்திக்க விரும்புவதாக கூறினாள். அதேபோல் ஆதித்ய கரிகாலனுக்கு மதுராந்தகனுடன் சமரசம் பேசுவதற்காக கடம்பூரிலிருந்து அழைப்பு வந்திருந்தது .குந்தவையின் பேச்சை கேட்காமல் ஆதித்ய கரிகாலன் தனியாக அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தார்.நந்தினி அதோடு மட்டும் சும்மா இல்லாமல் கந்தமாறனை தூண்டிவிட்டு ஆதித்த கரிகாலனுக்கு உன்னுடைய தங்கையை திருமணம் செய்து கொடுத்தால் அவள் நாட்டின் பட்டத்து ராணி என்று ஆசை மூட்டி விட்டாள். ஆனால் கந்தமாறன் தங்கையான மணிமேகலை பார்த்த கணத்திலேயே வந்தியதேவன் மீது காதல் கொண்டு இருந்தாள்.


கடம்பூர் வரும் ஆதித்ய கரிகாலனை பாண்டிய ஆபத்துபதவிகள் ஆன பரமேஸ்வரன் ,ரவிதாசன் உடன் சேர்ந்து கொல்ல திட்டமிட்டிருந்தாள் நந்தினி .அந்த நாளும் வந்தது ஆதித்ய கரிகாலன் அவருடைய நெருங்கிய நண்பரிடம் இளம் வயதில் பழகி காதலித்த பெண் தான் நந்தினி முடிசூட்டு விழாவில் பெரியபழுவேட்டரையர் மனைவியாக அவளை பார்த்த அன்றிலிருந்து எனக்கு தஞ்சைக்கு செல்ல விருப்பமில்லை அரச பதவியும் உடன்பாடில்லை என்று புலம்பினார்.


கடம்பூர் அரண்மனையின் பாதாள அறையில் ஆபத்துதவிகள் பதுங்கி இருந்தனர் .ஆதித்திய கரிகாலன் நந்தினியை பார்த்தவுடன் கலங்கினான் .என்னுடைய கணவனைக் கொல்லும் பொழுது உன்னிடம் உயிர் பிச்சை கேட்டேன் ஆனால் நீ எனக்கு கொடுக்கவில்லை என்று அலறினாள். வாக்குவாதம் பலமாக இருக்கும் பொழுது ஆதித்ய கரிகாலனுடைய சகோதரி என்ற புதிருக்கு பதிலை அவன் காதில் கூறினால் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆதித்த கரிகாலன் சிலையாக நின்றான். அவரை காப்பாற்றுவதற்காக வந்த வந்தியதேவன் அங்கே வந்து சேருகிறான் .அங்கிருந்த அரக்கி வந்திய தேவரை அடித்து போட மயங்கி விழுந்தார். நடந்தது என்ன என்பதை அறியாத நிலையில் கத்தியால் குத்தப்பட்டு கீழே கிடந்தார் ஆதித்ய கரிகாலன் .பழி வந்திய தேவர் மேல் விழுந்தது.


அதை பார்த்த மணிமேகலையும் அதிர்ச்சி அடைந்து கத்தினாள்.ஒருபுறம் இளவரசர் இறந்து விட்டதாக செய்தி மறுபுறம் இங்கே ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்டு கடம்பூர் அரண்மனையில் தீ விபத்து. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது தஞ்சை முழுவதும் .


கப்பலில் நடந்த ஆபத்தில் இருந்து எப்படியோ தப்பி ,தன்னுடைய பொறுப்பிலேயே அருள்மொழிவர்மன் கைதுசெய்யப்பட்டு வந்ததும் அவர் இறந்து விட்டதை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட பெரிய பழுவேட்டரையர். அங்கிருந்த கோயில் ஒன்றில் ஒதுங்கி இருந்தார். அப்போது தான் அங்கே ரவிதாசன் பரமேஸ்வரனும் பேசிக்கொண்டதை கேட்டார் தற்செயலாக நந்தினியின் சுயரூபத்தை தெரிந்துகொண்டார் .அவள் மீது பெரும் கோபம் ஏற்பட்டது சோழர்களை பழிவாங்கவே தன்னை பகடைக்காயாக பயன்படுத்தியதை எண்ணி வருத்தப்பட்டு ஆத்திரத்துடன் கடம்பூர் மாளிகை நோக்கி விரைந்தார் .


அருள்மொழிவர்மன் நாகப்பட்டினத்தில் புத்த மடத்தில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்தி கேட்டு வானதியும் ,குந்தவையும் சென்று பார்க்க நாகப்பட்டினம் கிளம்புகிறார்கள் . ஒருவழியாக மாறுவேடத்தில் அருள்மொழிவர்மன் தஞ்சைக் கோட்டைக்குள் நுழைகிறார் .அனைவரும் எதிர்பார்த்த பல புதிர்களுக்கு விடை காத்திருக்கிறது .பூங்குழலி அத்தை அங்கு அழைத்து வரப்பட்டு, தப்பி தலைமறைவாக மன்னரின் அறைக்கு அருகில் உள்ள பாதாள அறையில் தங்கி இருக்கிறாள் .மன்னரை கொல்லும் நாளும் குறிக்கப்பட்டது அது எப்படியோ அறிந்து அதில் இருந்து காப்பாற்றத்தான் மந்தாகினி அங்கே தங்கியிருந்தார்.


அருள்மொழி வர்மன் தந்தையை சென்று பார்க்கும் தருணத்தில் அங்கு அனைத்து உண்மைகளும் உடைக்கப்படுகிறது. அப்பொழுதுதான் குந்தவை தன்னுடைய தந்தை அந்த ஊமை பெண்ணை நினைத்து வருந்துவதாக கூறுகிறார் .அந்த ரகசியத்தைக்கேட்ட பிரம்மராயர் உண்மையை கூறுகிறார். உண்மை வெளிவருகிறது பிரம்மராயர் சென்று பார்க்கும் பொழுது கலங்கரை விளக்கத்தில் இருந்து விழுந்த மந்தாங்கினி சாகவில்லை என்றும் அவரை குணப்படுத்தி இலங்கைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக கூறுகிறார். உங்களுடைய நல்லதுக்காகத்தான் செய்ததாகவும் கூறி மன்னிப்பு கேட்கிறார் பிரம்மராயர் .


அதோடு மட்டும் இல்லை அவள் கீழே விழுந்தில் அவளுக்குப் புத்தி ஞாபகம் இல்லாமல் போய்விடுகிறது. அவள் போன படகில் தான் பாண்டிய மன்னன் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது . இரண்டு வருடங்களுக்கு பிறகு அவள் கர்ப்பமாகிறாள் அப்போது அவளை பார்த்துக் கொள்ள முடியாமல் அவளை கொண்டு வந்து அவளுடைய சகோதரி வீட்டில் விடுகிறார் தந்தை.அப்பொழுதுதான் செம்பியன் மாதேவியும் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி ,வாணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது .அவளுடைய அக்காவிற்கு ஒரு பெண் குழந்தையும் ,ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. அங்கே இருக்கும் பிரம்மராயருக்கு அனைத்தும் தெரியும் .செம்பியன்மாதேவி நம்பி வீட்டில் கொடுத்து பெண் குழந்தையை வளர்க்க சொல்கிறார். அந்த ஆண் பிள்ளை பாண்டிய நாட்டிலும்,இத்தனை வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை இறந்து பிறக்கிறது செம்பியன்மாதேவிக்கு ,வாணிக்கு பிறந்த குழந்தையை எடுத்துக் கொள்கிறார்கள் யாருக்கும் தெரியாமல், வாணிக்கு பிறந்த குழந்தையை தன்னுடைய குழந்தையாக வளர்க்கிறார் .இறந்ததாக நினைத்த குழந்தையும் உயிர் பெற்று விட்டது .அந்த குழந்தைதான் சேந்தன் அமுதன் அடுத்த மன்னன் ஆகக்கூடிய உரிமை உள்ளவன் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது .


ஆதித்த கரிகாலன், நந்தினி அவர்களுக்கு இடையே உள்ள நட்பு காதலாக மாறுவதை கண்டு,நந்தினியை பாண்டிய நாட்டிற்கு நாடு கடத்தி விடுகிறார்கள் .இதற்கிடையில் குறித்து வைக்கப்பட்டது போல் மன்னர்மீது கத்திப் பாய்கிறது அதை கவனித்த மந்தாங்கினி ஓடிவந்து அதை வாங்கிக் கொள்கிறாள் .அந்த இடமே இருட்டாகி விடுகிறது சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் மன்னருடைய மடியில் மந்தாங்கனி வைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார் .அதுவரை அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் அவளை பார்த்த உடன் துடித்துப் போய்விட்டார் சுந்தர சோழர்.


அனைத்து உண்மைகளும் அங்கே வெளிப்படுகிறது. உத்தமசோழன் என்னும் சேந்தன் அமுதன் அடுத்த அரசராகப் பதவி ஏற்கிறார் . சேந்தன் அமுதன் ,பூங்குழலி மீது தீராத காதல் வைத்துத்திருந்தான் ஆனால் அவளுக்கு தான் அவர் மீது ஈடுபாடு இல்லை. பிறகு அவன் மீது ஒரு பாசம் இடையில் அவன் அவளை கவனித்துக் கொள்வதில் பாசம் வருகிறது. இருவருக்குமிடையே காதல் பிறக்கிறது. பூங்குழலியும் அரசியாக மாறுகிறாள் .எல்லாம் கேட்ட நந்தினியும் காட்டில் சென்று கோவத்துடன், எப்படியோ அவளை கண்டுபிடித்து விட்ட பெரிய பழுவேட்டரையார் அங்கே செல்கிறார் .தலைவிரி கோலத்தில் இருக்கும் நந்தினி பாண்டிய ஆபத்துவதிகளுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றுவிடுகிறாள். சுந்தரசோழர் வயதான காலத்தில் இறந்துவிடுகிறார்.


உத்தம சோழன் தலைமையில் அரச கூட்டம் கூட்டப்படுகிறது .பலரின் முன் ஆதித்ய கரிகாலனுடைய கொலை பற்றி விவாதம் வர பெரிய பழுவேட்டரையர் குற்றணர்ச்சியில் அங்கு அவர் இன்னொரு உண்மையையும் போட்டு உடைக்கிறார். ஆதித்ய கரிகாலனை தவறுதலாக கொன்றது நான் தான். கடம்பூர் மாளிகைக்கு சென்றேன் ஆத்திரத்தில் நந்தினி மீது வாளை தூக்கி எறிந்தேன். அது ஆதித்ய கரிகாலன் மீது தவறுதலாக பட்டுவிட்டது என்று கூறி அழுததோடு அந்த இடத்திலே வாளை எடுத்து தன்னை குத்தி உயிரை நீக்கிக் கொண்டார்.


மதுராந்தகன் உண்மையான வாரிசு இல்லை அவன் ஒரு பாண்டியன் என்று அறிந்து பாண்டிய நாட்டிற்கு தப்பி ஓடி விடுகிறான் .செம்பியன் மாதேவியின் கணவரும் சத்தியம் வாங்கிய இறந்திருப்பார் மதுராந்தக சோழன் அரியணையில் ஏற கூடாது .அவனை சிவபக்தியில் ஈடுபடுத்து என்று .


அனைத்து புதிர்களும் விளக்கப்பட்டது கடைசியில் நந்தினி ஒரு பக்கம் சென்று விட்டாள், குந்தவையும் வந்தியத்தேவனும் திருமணம் புரிந்து கொண்டனர் .அருள்மொழி வர்மனுக்கும் ,வானதிக்கும் திருமணம் நடந்தது .தான் கோயில் கட்டும் பணியில் ஈடுபடுவதாகவும் அதற்காக ஊர் மக்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் வந்திய தேவரின் துணையுடன் கிளம்புகிறார் .


இதற்கிடையில் வந்தியத்தேவனை நினைத்து காதலில் உருகி செயலற்று கிடக்கிறாள் மணிமேகலை .அவளை காண்பதற்காக வந்தியதேவன் கடம்பூர் செல்கிறார் .அவருடைய மடியிலேயே மணிமேகலை தன்னுடைய உயிரை பிறிக்கிறாள் .இதனுடன் நாவல் முடிவடைகிறது பேராசிரியர் வந்தியத்தேவனை வைத்தே கதையை தொடங்கி மற்றும் கதையை முடித்திருப்பார். மிகவும் அற்புதமான ஒரு காவியம்.


மறக்க முடியாத தருணங்கள் வானதிக்கும் பூங்குழலிக்கும் வரும் காதல் போராட்டங்கள் யார் ஜெயிப்பார்கள் என்ற போட்டியில் அருள்மொழிவர்மன் தன்னுடைய மனதில் இருக்கும் காதலையும் வெளிப்படுத்த முடியாமல் தமக்கை சொல் மீற முடியாமல் தவிப்பதும் ,சொந்த ஊருக்குள்ளே மாறு வேடமிட்டு வரும் காட்சிகளும், பாதாள அறைக்கு உள்ளே நடக்கும் திடுக்கிடும் தருணங்களும் ,ஆச்சரியங்களும் .மணிமேகலையின் வந்தியத்தேவன் மீது வரும் காதலும் ,வந்தியதேவன் குந்தவியின் காதலும் ,ஆதித்த கரிகாலனுடைய மரணம் காட்சி யாராலும் மறக்க முடியாது ,நந்தினி, பெரிய பழுவேட்டரையர் மீது வரும் இரக்கமும் என பல அடுக்கிக் கொண்டே போகலாம். அழகான கற்பனையுடன் கூடிய சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றைக் கூறும் உத்தமமான காவியம் .



Click below link for Ponniyin selvan audio book



Friday, January 29, 2021

சிந்தனைக்குரிய பகுதி-"காலம்" by Vidhya Nivash

 


சரியான காலத்திலேயே பயிரை அறுவடை செய்ய வேண்டும்

இல்லை எனில் பயிர் முற்றி விடும் என்பார்கள்!!!


இளவேனிற்கால மலர்களும்,

கோடைகால வெயிலும், இளநீரும்,

இலையுதிர் கால காற்றும்,

குளிர்கால பனியும்..

இவை எல்லாம் காலம் தவறினால்??



காலை எழுந்தவுடன் சூடான காப்பி ,

பேருந்துக்கு காத்திருக்கும் நேரம்,

வரச்சொன்ன நண்பர் சரியான நேரத்தில் வராத போது,

நினைத்தவையாவும் சரியான நேரத்தில் நடக்காதபோது ,

வருமே கோபம்!!!

அது காலம் தாமதிக்கலாம் அல்லவா ? சில நேரங்களில் காத்திருக்கும் காலமும் சுகமே அல்லவா?


வயதான காலத்தில் தாய், தந்தையருக்கு காட்டவேண்டிய அரவணைப்பும்,

இளமை காலத்தில் பிள்ளைகளுக்கு காட்டவேண்டிய அன்பும் ,

உடலில் வலு உள்ள காலம் வரை ஆற்றவேண்டிய தொண்டும்,

சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய ஓய்வும்,

உதவி கேட்பவருக்கு உதவுவதும்,

நன்றி மறவாமையும்,

மன்னிப்பு கேட்கவும்,

கொடுத்த வாக்கை காப்பாற்ற,

இவை எல்லாவற்றிலும் காலம் தவறாமல் "காலத்தை சரியாக கடைபிடிக்க அந்த காலனையும் வெல்லலாம்".


Time is like a breath, if you keep it properly, your life time will increase definitely.


T- test your sincerity

I- identity for your hornesty

M- money for lifetime , don't waste it

E- endless happiness if you keep it properly!!!


Thursday, January 28, 2021

எஸ்.ராவின் "ஒரு பிடி சோறு" -"படித்ததில் பிடித்தது" by Vidhya Nivash


 


அனைவருக்கும் வணக்கம் ,

படித்ததில் இதயத்தை தொட்ட கதை எஸ்.ரா அவர்களின்"கதாவிலாசம்" பல ஆசிரியர்களின் சிறுகதை தொகுப்பு படித்து வருகிறேன் என்று சொல்வதைவிட வாழ்ந்து வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக நாவல்கள் படிக்கும் பொழுது அந்தக் கற்பனை உலகில் மூழ்கி கனவில் மிதந்து கொண்டு இருப்போம். ஆனால் மாறாக இலக்கிய எழுத்தாளர்கள் உடைய புத்தகங்களை படிக்கும் பொழுது சிந்தனைகளால் தூண்டப்பட்டு, இரண்டு கதைகளுக்கு மேல் நம்மால் படிக்க முடியாது .அதுவே நாவலாக இருந்தால் ஆயிரம் பக்கங்களையும் கூட படித்து முடித்து விட முடியும்.


எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களை என்னவென்று சொல்வது ஒரு ஆண்டு காலமாக மட்டுமே புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது அவருடைய எழுத்துக்களை படிக்க படிக்க சிந்தனைகள் பரந்து விரிகின்றன. மாபெரும் தொண்டு அவர் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர் படித்த அற்புதமான மாணிக்கங்களை அனைவருக்கும் பகிரும் விதம் மிகவும் உத்தமம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.



" கதாவிலாசம் "இப்பொழுது தான் படித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் முடிக்கவில்லை .விளக்கம் பிறகு பதிவிடுகிறேன் .அதிலிருந்து ஒரு சிறிய மணித்துளி இன்று பதிவிட விரும்புகிறேன் .இந்த புத்தகத்தை எனக்கு படிக்கக் கொடுத்த அகிலாவிற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .புத்தம் புதிதாக இருக்கிறது புத்தகம் அவர் படித்தாரோ இல்லையோ என்று தெரியவில்லை ஆனால் அது எனக்கு பரிமாறும் பாக்கியம் கிடைத்தது மிக்க நன்றி.இதனுடன் புத்தகத்தின் பக்கங்கள் மற்றும் ஆடியோ இனணத்துள்ளேன்.

Click below to read and hear "ஒரு பிடி சோறு"


ஒரு பிடி சோறு audio book











கல்கியின் "பொன்னியின் செல்வன்" சுருக்க விளக்கம் 1 by Vidhya Nivash

 


அம்மாவிற்காக பொன்னியின் செல்வன் கதை சொல்ல வருகிறேன். பொன்னியின் செல்வன் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கனவு, தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாவலைப் படிக்கத் தூண்டப்படுகிறார்கள். அதற்கு காரணம் பேராசிரியர் கல்கி தன்னுடைய கைவண்ணத்தால் மிக எளிமையாக யாவரும் படிக்கும் வகையில் படைத்துள்ளார். சின்ன அம்மாச்சியின் படுக்கையில் பொன்னியின் செல்வனை பார்த்தவுடன் இந்த எண்பது வயதிலும் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை பார்த்து ,எப்படியாவது பொன்னியின் செல்வனை வாழ்நாளில் படிக்க வேண்டுமென்று ஆசை வந்தது அதற்கு கொரானா உதவியது.


எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனை அழகு பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் எழுத்தின் எளிமையை சொல்வதா ?ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சித்தரிக்கும் விதத்தை சொல்லுவதா? அங்கே கொட்டிக் கிடக்கும் பெண்களின் அழகு பெண்களான நமக்கே பொறாமை வரும் அந்த அளவுக்கு வர்ணனை .இயற்கையை வர்ணித்ததை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ,அத்தனை அழகு அதைப் படிக்கும் பொழுதே நாமும் அதில் காற்றில் கலந்து எங்கும் பறப்பது போல் தோன்றும்.


பொன்னியின் செல்வன் எதைப்பற்றிய நாவல் என்பதை தெரியாமல் படிக்க ஆரபித்தேன் முதல் ஆச்சரியம் இது சோழர்களின் வரலாற்று நாவல் என்பது எனக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. இரண்டாவது பொன்னியின் செல்வன் யார் என்று தெரியாது அதை அறியும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது . முடிந்த வரை கதையை சுருக்கிச் சொல்ல முயல்கிறேன்.


வல்லவராயன் வந்திய தேவனை கொண்டு கதையை இயக்கியிருக்கிறார் கல்கி.ஆரம்பிப்பதற்கு முன் அதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களை விளக்கினால் உங்களுக்கு புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுந்தர சோழர் அவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் ஆதித்ய கரிகாலன் ,இளையவர் அருள்மொழிவர்மன் ,தந்தையே அறிவுரை கேட்கும் அளவிற்கு பெண்களின் மகத்துவத்தை உயர்த்திக் காட்டும் அத்தகை பெருமைகுரிய குந்தவை சுந்தர சோழரின் ஒரே மகள். சோழர்களின் பெரும் மதிப்பிற்குரிய அரசாங்க அதிகாரிகளான பெரிய பழுவேட்டரையர் மற்றும் சிறிய பழுவேட்டரையர். சோழர் குலத்தின் தளபதியான முதல் மந்திரியான கிருஷ்ணராயர் எனும் பிரம்மராயர். அவருடைய தலைமை ஒற்றனான ஆழ்வாருக்கடியான் நம்பி. சுந்தர சோழர் உடைய பெரியப்பாவான கண்டங்கத்திரியார் ,செம்பியன் மாதேவி அவர்களால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மதுராந்தகன். நந்தினி நாவல் முழுவதும் புரியாத புதிராக இருக்கும் ஒரே கதாபாத்திரம் பெரிய பழுவேட்டரையருடைய ஆசை நாயகியாக அறிமுகம் ஆவாள்.


நாவலின் ஆரம்பத்தில் ஆதித்த கரிகாலனுடைய நண்பரான வந்தியதேவன் இரண்டு ஓலைகளுடன் காஞ்சிபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி பயணிக்கிறார். ஆடிப்பெருக்கன்று அழகான வீரநாராயண ஏரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. பழையாறையில் இருக்கும் குந்தவையை சந்தித்து ஓலை கொடுப்பதற்கு முன் இரவு வழியில் இருக்கும் கடம்பூரில் தன்னுடைய நண்பன் கந்தமாறனை சந்தித்து அங்கு தங்க முடிவு பண்ணுகிறார் வந்தியதேவன் போகும் வழியில் ஆழ்வாருக்கடியான் நம்பியை ஒரு கலவரத்தில் சந்திக்கிறார். அங்கே அறிமுகமான நம்பி நீ கடம்பூர் மாளிகைக்கு செல்வதாக இருந்தால் தன்னுடைய தங்கையான நந்தினிக்கு ஒரு ஓலையைக் கொடுக்குமாறு வந்தியதேவனிடம் கேட்கிறார்.


அங்கே பெரிய பழுவேட்டரையர் மிகப்பெரிய ஆரவாரத்துடன் கடம்பூர் அரண்மனைக்கு வந்து சேர்கிறார். அரண்மனை வாசலில் சிறிய சண்டையுடன் எப்படியோ கந்தமாறனை சந்தித்து அவருடைய தந்தையான சம்புராயருக்கு அறிமுகபடுத்தப்படுகிறார். கந்தமாறன் அன்றிரவு அங்கே தங்குவதற்காக அவருக்கு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். ஒரு திருப்பம் காத்திருந்தது பெரிய பழுவேட்டரையர் தலைமையில் அடுத்த சோழ மன்னனாக அரியணையில் ஏறுபவர் யாரென்று பல சிற்றரசர்கள் மத்தியில் அங்கே ஆலோசிக்கப்பட்டது. ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்டுபட்டு இருக்கையில் எப்படி மதுராந்தகன் அரசனாக பதவி ஏற்பது அவரோ சிவபக்தியில் மூழ்கி இருக்கிறார் என்று பலரும் சொன்னார்கள். அங்கே காத்திருந்த அவருடைய ஆசை நாயகியின் பல்லக்கிலிருந்து மதுராந்தகன் அனைவரும் ஆச்சரியமூட்டும் வகையில் வெளியே வந்தார். இது யாருக்கும் தெரியாத வண்ணம் மறைமுகமாக நடத்தப்பட்ட கூட்டம் இதை ஒளிந்திருந்த வந்திய தேவர் ஒருபுறமும் ஆழ்வாருக்கடியான் நம்பி ஒரு புறமும் நோட்டமிட்டனர். அங்கே பல அதிர்ச்சி மிக்க தகவல்களை சேகரித்து அங்கிருந்து விடை பெறுகிறார்.


பல அழகான இயற்கை அழகை ரசித்தவண்ணம் வந்திய தேவர் கடைசியில் பழையாறையிக்கு சென்றடைகிறார். ஜோசியரை பார்த்து வருகிறார் குந்தவையும் அவளுடைய நெருங்கிய தோழியான வானதியும் ,வானதி கொடும்பாளூர் வேளாளர் உடைய இளவரசி அவருடைய தந்தையை இழந்த காரணத்தினால் இங்கே குந்தவியின் கண்காணிப்பில் இருக்கிறாள்.


குந்தவைக்கு தன்னுடையை இளைய தமையன் அருள்மொழிவர்மனுக்கு வானதியை திருமணம் செய்து கொடுக்க ஆசை. வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும் சந்திக்கும் இடத்தில் ஏற்படும் காதல் கலவரங்களில் நாமும் காதலிக்க மறக்கமாட்டோம். ஓலையில் ஆதித்ய கரிகாலன் இங்கு நிலைமை எதுவும் சரியில்லை உடனடியாக அருள்மொழிவர்மனை இலங்கையில் இருந்து கிளம்பி வருமாறு தமக்கைக்கு உத்தரவிட்டு இருந்ததோடு வந்திய தேவன் மிகவும் உண்மையான ஒருவன் எதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். குந்தவை பிராட்டி வந்தியத்தேவனிடம் தன்னுடைய இளைய தமையன் ஆன அருள்மொழி வர்மனுக்கு ஒரு ஓலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.


வந்திய தேவர் தஞ்சைக்கு செல்கிறார் அங்கே கோட்டைக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் இரவில் பூ தொடுக்கும் ஒருவருடைய பழக்கம் கிடைக்கிறது அவருடைய பெயர் சேந்தன் அமுதன் அவனுடைய தாய் வாணி அவருக்கு வாய் பேச வராது. எப்படியோ தவறுதலாக நந்தினியின் அறைக்குள் சென்று விடுகிறார் .வந்தியத்தேவனும் மயங்கி விடுகிறார் அவள் அழகில் அடுத்த கணம் சுதாரித்து இருவரும் அறிமுகமாகிறார்கள் .அப்பொழுது நந்தினியும் வந்தவரிடம் ஒரு உதவியை கேட்கிறாள். அப்பொழுது அவள் கொடுக்கும் அடையாள முத்திரையை பல இடங்களில் பின்பு பயன்படுத்திக் கொள்கிறார் வந்தியதேவன். அரண்மனை கோட்டை முழுவதும் சிறிய பழுவேட்டைரையார் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. அவரின் பிடியில் மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்கிறார் .அங்கே நந்தினியின் முத்திரையை காட்ட வந்தியத்தேவன் மீது வெறுப்பு அதிகரிக்கிறது. சிறிய பழுவேட்டையாருக்கு நந்தினியின் மீது சரியான உடன்பாடில்லை. இதில் குந்தவையும் வந்து சேர மன்னரிடம் ஓலை சென்றடைகிறது. ஓலையில் ஆதித்ய கரிகாலன் தந்தையைத் தான் கட்டி இருக்கும் பொற்க்கோட்டையில் வந்து தங்குமாறு வேண்டியிருந்தார். அதில் நோய்வாய்ப்பட்டிருந்த மன்னருக்கு உடன்பாடில்லை.


சேந்தன் அமுதன் உடைய மாமன் மகளான படகு ஓட்டக்கூடிய பூங்குழலி உதவியுடன் இலங்கைக்கு பயணத்தை தொடங்குகிறார் வந்தியதேவன். ஆதித்ய கரிகாலன் வீரபாண்டியருடைய தலையை கொய்தும், பாண்டியருடைய மணிமுடியை அடைய முடியவில்லை . அது இலங்கையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அடைய படை எடுத்து சென்றிருந்தார் அருள்மொழிவர்மன் இலங்கைக்கு, சென்ற இடத்திலும் புகழ் சேர்க்கும் அளவிற்கு அமைதியான முறையில் போர் புரிந்தார் .அதோடு மட்டுமில்லாமல் அங்கே போரில் சேதமடைந்த புத்த கோயில்களையும் சரிசெய்து அவர்களுடைய மரியாதையும் பெற்றார், அரியணையில் பொறுப்பேற்க வாய்ப்பு வந்தும் அவருடைய பெருந்தன்மையால் அதை ஏற்க மறுத்தார் . அப்பொழுதுதான் புத்த விகாரங்களுக்கு இணையாக ஒரு பெரிய சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றியது அருள்மொழிவர்மன் மனதில்.. ஒருபுறம் தஞ்சைக்கு வருமாறு குந்தவியின் ஓலையுடன் வந்தியதேவன், காஞ்சிக்கு வரவேண்டுமென்ற ஓலையை ஆதித்ய கரிகாலன் நண்பனான பல்லவர் எடுத்துக்கொண்டு வருகிறார் இலங்கைக்கு ஒரு புறம், அங்கேயே இருந்து படைகளை முன்னேற்ற வேண்டும் என்று உத்தரவுடன் பிரம்மராயர் ,வேளாளர்கள் ஒருபுறமும் , இளைய மகனை சந்திக்க விரும்பும் மன்னரின் ஆசையை நந்தினியின் யோசனையால் இலங்கையில் ஆட்சி அமைக்க திட்டம் போட்டதாக துரோகம் என்று அவரை கைதி செய்துவர மன்னரின் உத்தரவுடன் பெரிய பழுவேட்டரையர் ஒருபுறமும்.. நான்கு பேரும் அருள்மொழிவர்மனினை சந்திக்க இலங்கைக்கு செல்கிறார்கள். கண்ட இடத்திலேயே வந்திய தேவருக்கும் அருள்மொழிவர்மனுக்கு நட்பும், பூங்குழலிக்கு காதலும் மலர்கிறது.இராஜராஜ சோழன் என்று பெருமைக்கொள்ளும் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனை அந்த இடத்தில் தான் நானும் கண்டேன்.

இலங்கை காடுகளில் பயணிக்கும்போது வரும் ஆபத்துகளிலிருந்து அங்கே வரும் சூறாவளி போன்ற வயதான ஊமைப் பெண் காப்பாற்றுகிறார்.அது மட்டுமில்லாமல் அருள்மொழி வர்மனை, ஒரு குகையில் அவள் தீட்டிய சித்திரத்தையும் காட்டி அருள்மொழியின் சரித்திரத்தை கூறுகிறார். 

அருள்மொழிவர்மனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது அவள் பார்ப்பதற்கு நந்தினி போலவும் அவள் கூரிய விஷயங்கள் புதிராக இருந்தது. அவள் பெயர் மந்தாங்கினி பூங்குழலி உடைய அத்தை சேந்தன் அமுதன் தாய் உடன் பிறந்தவள்.


நந்தினியைப் பற்றிய இரண்டு புதிர்கள் ஒன்று அவள் பாண்டிய மன்னனுடைய காதலி ,மற்றொன்று ஆதித்திய கரிகாலனுடைய முன்னாள் காதலி. சோழர் களை பழி வாங்குவதற்காகவே பெரிய பழுவேட்டரையரை மணந்துகொண்டு மயக்கி வைத்திருந்தாள். அவளுக்கு ஆதரவாக பாண்டிய ஆபத்துவதிகளான பரமேஸ்வரன் ,ரவிதாசன் தலைமையில் மறைமுகமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் பலர். பூங்குழலியின் அண்ணி அதிலும் ஒருத்தி, இலங்கையிலிருந்து கைது செய்து வரும் பொழுது கப்பலிலேயே அருள்மொழிவர்மனை தீர்த்து கட்ட முடிவு பண்ணியிருந்தாள் நந்தினி.

தந்தையின் உத்தரவுக்கு இணங்கி கைதியாக பெரிய பழுவேட்டரையருடன் தஞ்சைக்கு கிளம்புகிறார் அருள்மொழிவர்மன். கப்பலிலே செல்லும்பொழுது பாண்டியர்களால் ஏற்படும் ஆபத்தும் , கடைசியில் பத்திரமாக சேந்தன் அமுதன் ,பூங்குழலி மற்றும் வந்தியதேவன் உடன் நாகப்பட்டினத்திலுள்ள புத்த மடத்தில் தஞ்சம் அடைகிறார் இளவரசர்.


கண்டிப்பாக சுட்டி காட்ட வேண்டிய இடங்கள் இலங்கைக்கு செல்லும் முன் இளவரசரைப் பார்த்து மயங்கி விழும் வானதி சந்திக்கும் இடமும், தஞ்சை கோட்டையின் அழகையும் , ஒரு பெண் நினைத்தால் நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்ல முடியும் அதே போல் சொர்க்கத்திலிருந்து நரகத்திற்கு அழைத்து செல்ல முடியும், என குந்தவையும், நந்தினியையும் அழகாக வர்ணிக்கிறார் ஆசிரியர், வந்திய தேவருக்கு ஆபத்து வரும் இடத்திலெல்லாம் ஆழ்வார்க்கடியான் நம்பி வருவதும் அவர்களுக்கிடையேயான நகைச்சுவை கலந்த உரையாடல்களும் மிகவும் சுவாரசியமானவை, பூங்குழலி கடல் மீதும் இளவரசர் மீதும் கொண்டிருக்கும் காதல்கள் மிகவும் இனிமையானவை, கடலுடன் ,காட்டில் பல மர்மங்களுடன்,இயற்கை அழகுடன் நம்மை இணைத்து பயணிக்க செய்யும் அழகிய உயிரோட்டமான காவியம்.

தொடரும்...

Click below link for Ponniyin selvan audio book

Ponniyin selvan audio book 1







Wednesday, January 27, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"காலம்" by Akhiladevi Kumaran

 


எல்லோருக்கும் எப்போதும் உண்டு- எனினும், எல்லோருக்கும் எப்போதும் தேவை 🥳


TIME - Player without any "substitute"

TIME - Impossible to catch - Always Flies!!!!



“டக்டக்”னு வேலைய செய்யலைனா,

“டிக்டாக்” தரும் பரிசு- 

“திக்திக்” நிமிடங்கள்!!








Tuesday, January 26, 2021

சிந்தனைக்குரிய பகுதி - "காலம்" by Veena Shankar

 




சிந்தனைக்குரிய பகுதி- "காலம்" by Kiruthika


நேற்றைய முற்றுப்புள்ளி..இன்றைய கமா,,,,நாளைய வினா?...அர்த்தங்கள் ஆயிரம் அணிந்த - அபூர்வ காலம்..!!!!...


எந்த பக்கத்தில் -என்ன வார்த்தைகள் ? பிரசவிக்கும் என்றறியாத காகிதம் போலே.... எந்த நாள் -என்ன நிகழும்? என்றறியாத கால கண்ணாடி- நம்மை கொண்டு செல்லும் முன்னாடி..!!!!

ஜெயமோகன் அவர்களின் "வெண்கடல்" புத்தக விளக்கம் by Vidhya Nivash

 


"வெண்கடல்" புத்தகம் ஜெயமோகன் அவர்களின் சிறுகதைகள் தொகுப்பு. ஒரு எழுத்தாளனின் வெற்றி நம்மை அந்த கதைகளிலே மூழ்கடித்து ,சிந்தனையை கிளறிவிட்டு, பல தேடல்களை உருவாக்குகிறது. அந்தவகையில் இந்த புத்தகம் சிறு கதைகள் வாயிலாக பல எண்ணங்களை தூவி செல்கிறது. சிலவை வடுக்களாக பதிந்துவிடுகிறது.


"பிழை "என்னும் தலைப்பில் சிறிய விஷயங்கள் மகிழ்ச்சி கொடுத்தாலும் பெரிய விஷயங்களுக்கு அருகிலே இரு அதுதான் வாழ்க்கை என்று தொடங்கி,சரித்திரத்தில் ஒரு "ஈ" ஆகவாது இருக்கவேண்டும் என்று முடிகிறது. பழைய ஹிந்தி திரைப்படமான "ராம ராஜ்யா"அதை காந்தி பார்த்து உருகியதும் நம்மையும் அதில் உருகச் செய்து.அந்தப் படத்தில் ஒரு பாடலில் வரும் சிறிய பிழையை அதில் வேலை செய்த கலை ரசிகனால் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பற்ற துயரை அற்புதமான காட்சி ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். அந்தக் காட்சியை தேடிப் பிடித்து பார்க்க தூண்டியது அவருடைய எழுத்து..


"கைதிகள் "என்னும் தலைப்பில் வரும் கதை காட்டில் வேலை செய்யும் காவலர்கள் உடைய அவதிகளை, காட்டின் அழகோடு சேர்த்து வர்ணித்துள்ளார். அவர்களுடைய மனோநிலையை ஒரு சிறிய சிட்டு குருவியுடனும் , சவக்குழி தோண்டுவதனுடன் ஒப்பிட்டு .காலத்தின் கட்டாயத்தினால் செய்யும் வேலையையும் ,அங்கே என்கவுண்டர் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட கைதி கேட்கும் ஒரே ஒரு கேள்வி சாவின் போதும் பிறர் நலன் நாடும் மனது நம் மனதையும் கனக்கச் செய்கிறது .எதுவும் பாவமில்லை என்று அவர்கள் தங்களையே சமாதானப் படுத்திக் கொள்வதும் என முடிகிறது.


பிள்ளையில்லா வீட்டில் சொத்தெதற்கு என்பதுபோல் கதையில் வரும் மனைவி எதற்காக நிலம் நிலம் என்று கணவன் அலைந்து கொண்டிருக்கிறார் என்று வருத்தப்பட அதனால் தான் அவனால் இப்படி இருக்க முடிகிறது. பிள்ளைகள் இருந்தால் என் கதிதான் என்று சொல்லாமல் சொல்லும் ஒரு பரதேசியுடைய சொல் அவளுடைய மனத்துடன் சேர்ந்து நம்முடைய மனமும் கலங்கச் செய்கிறது.


"வெண்கடல்" என்னும் தலைப்பில் ஒரு பெண்ணின் வலியின் ரணத்தை குறைக்கும் ஒரு அட்டை பூச்சி மீது கூட அவள் காட்டும் இரக்கத்தை மிக அழகாக படைத்துள்ளார் ஆசிரியர்.


மிக அழகான வட்டார மொழியில் கிராமங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி படிக்கும் அனைவரையும் அதில் பயணிக்கச் செய்திருக்கிறார் ஆசிரியர். அம்மையப்பமும் ஆசாரியும், நமக்கு பிடித்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று புரிந்து செயல்பட்டால் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே.. எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை இன்பம், சமுதாயத்தில் எதிர்த்துக்கேட்பவர்களுக்கு மரணமே மிச்சம், உண்மையான ஆசான் உடைய ஆசீர்வாதம் இல்லாத போது எந்த ஒரு விருதும் பெரிய விருது அல்ல.. என பல சிந்தனைகளை அலை அடிக்க செய்கிறது வெண்கடல் புத்தகம்.

Sunday, January 24, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"காலம்" by Veena Shankar

 


எவருக்கும் அடங்க மறுக்கும் காளை - காலம்

காலம் முடிந்த கதைகளின் சங்கமம் முடிவினை எதிர்நோக்கும் சுயம்வரம்

சிந்தனைக்குரிய பகுதி- "உள்ளுணர்வு" by Veena Shankar

 


 "கனவின் பிரதிபலிப்பே உள்ளுணர்வு"

காய்கறி வாங்கும்போது கருவேப்பில்லை கிடைக்கும் என நினைப்பது பெண்ணின் உள்ளுணர்வு😃😃😃 for a joke

Tuesday, January 19, 2021

எஸ்.ரா அவர்களின் "சஞ்சாரம் புத்தக விளக்கம்" by Vidhya Nivash

 


எஸ் .ராமகிருஷ்ணன் அவர்களின் "சஞ்சாரம்" சாகித்ய அகாடமி விருதுபெற்ற புத்தகத்தைப் பற்றி.. இது நாதஸ்வரத்திற்கும், கரிசல்மண்ணிற்கும் இடையே உள்ள உறவை விளக்கும் புத்தகம். நாதஸ்வரம் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது கல்யாணம், திருவிழாக்களும் ,கச்சேரிகளில் பட்டு ஜிப்பா, ஜவ்வாது..


ஆனால் இந்த புத்தகம் நாதஸ்வரத்திற்க்கும் ,பாமர மக்களுக்கும் ,கரிசல் காட்டில் கொளுத்தும் வெயிலிலும் இசையை ரசிக்கும் மக்களையும் ,அடுத்த வேலை உணவிற்கு இல்லாதபோதும் இசை மீது உள்ள காதலும் ,உயிரே போனாலும் விட்டுக்கொடுக்காத இசை உணர்வும் மிக அழகாக விளக்கியுள்ளது.ஒருவனுக்கு இசை மீது காதல் இருந்தால் மட்டும் போதும் அங்கே மொழி ,ஜாதி ,ஊர் பெயர்,உடல் இதற்கு இடமில்லை என்று ஆசிரியர் எடுத்துக் காட்டியிருக்கிறார். நாதஸ்வரம் பற்றிய பல வரலாறு இதுவரை கேட்டிராதரவற்றை இப்புத்தகத்தில் மிக அழகாக ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.சொல்லப்போனால் இந்த புத்தகத்தின் கதாநாயகனுடன் நானும் கரிசல் மண்ணில் நடமாடி வியர்வையால் நனைந்து இசையில் மூழ்கினேன் என்று தான் கூற வேண்டும். கலை இருக்கும் இடத்தில் மூர்க்கத்தனமும் இருக்கத்தான் செய்கிறது அதையும் தாண்டி அதில் மனிதத்துவத்தை ஆசிரியர் மிக அழகாக காட்டி இருக்கிறார்.வளர்ந்து வரும் நாகரிகத்தில் பலவும் மறைந்து வருகின்றன ஆனால் சாதி நோய் குறையவே இல்லை,பல கலைஞர்கள் குடும்ப நலனுக்காக தடம்மாறி போனாலும்,உண்மையான கலைஞன் இசையை நெஞ்சில் சுமந்து அங்கும் இங்குமாக நடமாடுகிறான் என அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

Monday, January 18, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"உள்ளுணர்வு" by Vidhya Nivash

 


வீட்டில் பிள்ளைகளின் செய்கைகளைப் பார்க்கும்பொழுது என்னை நினைவூட்டும் உள்ளுணர்வு ...


தோழிகள் சமைத்துக் கொடுக்கும் உணவில் அம்மாவின் கைமணம் ஞாபகமூட்டும் உள்ளுணர்வு...


கணவரின் அக்கறை பலநேரம் அப்பாவை நினைவூட்டும் உள்ளுணர்வு...


திருமணத்திற்குப் பின்பு தான் உணர்ந்தேன் உன்னுடைய பாசத்தை சகோதரியே எனும் உள்ளுணர்வு...


பல நேரம் கடந்து செல்லும் போது நினைவூட்டும் நாம் எப்பொழுதோ நுகர்ந்த மல்லிகைப்பூ வாசத்தையும் ,வாசனை திரவியம் வாசனையும், முறுக்கு சுடும் வாசனையும் ,கடலைமிட்டாய் வாசனையும் நினைவூட்டும் பல உள்ளுணர்வுகள்..


காலத்தின் கோலத்தால் இழந்த பலரையும் நினைவூட்டிக் கொண்டிருக்கும் உள்ளுணர்வுகள் பல....


நெருங்கியவரின் மூச்சுக் காற்று நினைவூட்டும் உள்ளுணர்வுகள் பல...


சொந்தம்,பந்தம்,வாசனை,சுவை,கோபம்,

சண்டை,பயணம்,மழை,சாலை,பள்ளி,ஆடல், பாடல்,அழுகை,வலி,வெட்கம்,அவமானம்,சுகம், பிரிவு...என இறந்த காலத்தையும் ,நிகழ் காலத்தையும் நினைவால் இணைக்கும் உள்ளுணர்வு கூறும் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று...


பயத்தில் நடுங்கி , சோகத்தில் துவண்டு, தனிமையில் வாடும்போது இதுவும் கடந்து போகும், உன்னால் முடியும் என்று சொல்லும் உள்ளுணர்வு என்றும் மகத்தானது!!!!




இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...