* இயற்கையின் நிறம் *
உழுத விளை நிலத்தின் -
செம்மண் நிறம்...!!!..
விதையில் இருந்து எழுந்த-
முதல் பயிறின் நிறம்...!!!...
தங்க நிற கதிர்கள் தெளித்த -
பகல் வானின் நிறம்..!!!...
வெள்ளி நிற மழைத்துளிகள்-
மண் சேர்ந்த நிறம்..!!!..
மண்வளம் நீர்வளம் பிரசவித்த-
அறுவடைக்கான நெல்லின் நிறம்..
என அத்தனையும்..
அழகோ அழகு -
கண்குளிர வர்ணிக்க .. நமக்கு...!!.
பசியார ஜீவணிக்க.. விவசாயிக்கு..!.

அழகான நிறங்கள்👏
ReplyDeleteUr wordings are colourful and meaningful!
ReplyDelete