Sunday, January 3, 2021

சிந்தனைக்குரிய பகுதி-"இயற்கையின் நிறம்" by Kanchana

 





*செம்மை* 


எந்த சலனமும் இல்லாமல் அதிகாலைவேளையில் செவ்வானம் செங்கதிரவனை பிரசவிக்கிறாள்......


மெல்ல மெல்ல செங்கதிர் தன் கண்களை திறந்து தங்கசரிகையின் மினு மினுப்பினை போல.... செங்கதிர்துகளாய் மண்ணில் விழுந்து....... 


அதுவரைதன் இதழ் மூடிய செந்தாமரை ஒரு ஒரு இதழ்களாய் விரித்து மலர்கிறாள்..... 


அதுவரை கண்ணிதழ்களை திறவாமல் இருந்த பெண்மணிகள்....

வண்ணக் கோலங்களை போட்டு வரவேற்கிறாள்..... 


அதுவரை நாணத்தால் தலைசாய்த்திருந்த செந்நெல் கதிர்கள் தலைநிமிர்ந்து மைலாஞ்சியாய் சிவக்கின்றாள்......

செங்கதிரவனால்!


*வெண்மை* 


ஒன்றோடுஒன்று சிரித்து உரசிக்கொண்ட வெண்

மேகங்களின் புன்னகைகளின் சிதறல்துளிகள்.....


புன்னகை

துளிகளாய்..... மழையாய்...... மலைமீது வந்து சேர்ந்து..... 

வெள்ளி துகள்களாய் உருகி வழிந்தோடி....... நீர்வீழ்ச்சியாய்.... 


சமுத்திரத்தில் சங்கமிக்கும்..... புன்னகை துளிகளின் ஓர் மழைத்துளி.....

முத்தாக!


*பசுமை*


எண்ணற்றவை பறவைகளின் எச்சல்களின் தூறாள்களால்..... மயில்தோகையின் அழகினை ஞாபகபடுத்தும்.....ஓங்கி வளர்ந்த மரங்களின் பசுமையான செழுமை......


விழுதுகளால் கடக்காலிட்டு.... அழகான மரவீடாக சாலையின் இரு மருங்கிலும்...... மரங்கள்  


எண்ணற்ற பறவைகளின் பசுமையான 

இல்லங்களாக...... *மரங்கள்*!


 
இப்பேர்பட்ட புனிதமான என் பாரதாயின் மடியில்...... 

*செம்மையான* வளங்களும்,
கனிமங்களும்! 

ஜாதி,மத, பேதமில்லாமல் *வெண்மையான* மனங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதர,
சகோதரிகளும்!  

உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் மானுடர்களை தாண்டி எண்ணற்ற பறவைகளின் வருகைக்கு உவந்த *பசுமையான* இயற்கை சூழலும்! 

நிறைந்த நம் பாரததாயின் தாய்மையை மதித்து.....

செம்மையான வளங்கள் நிறைந்த நம் மண்ணில் சுரண்டி எடுக்கும்  
பல கனிம வளங்களை அழித்து வரும் வியாபாரத்தை புறக்கணிப்போம்! 

வெண்மையான மேககூட்டங்களில்கலக்கும் எண்ணற்ற தொழிற்ச்சாலைகளின் புகைமண்டலங்களினால் வரும் வர்த்தகத்தினை புறக்கணிப்போம்!  


உயிரினங்களின் வாழ்வாதாரங்களையும், மரங்களை அழித்து வரும் எட்டு வழி சாலைகளை புறக்கணிப்போம்!

செம்மை வெண்மை
பசுமை வண்ணங்களால் பறக்கும் தேவதையாக நம் பாரத்தாயினை வானில் உலவவிடுவோம் சுதந்திரமாக.....!





4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...