Sunday, February 7, 2021

கவிதை துளி " கடிகாரம்" by Chellammal

 




வாய் வழி விரியும் விந்தை!

 ⏲️⏱️⏰⌚️🕛🕰️🕝🕒⌚️🕰️⏰


உதயம் முதல் 

மறையும் வரை 

உனது பயணம்

மூன்று முட்களோடு..


திருகி விட்டாலும்..

திமிறாமல் இருந்து

முட்களின் சங்கமத்தில் 

சங்கீதம் ஆகிறாய்..


ஓடியோடி 

ஓங்கியடித்து 

ஓங்கார ஓசையோதி 

உனைத் தண்டித்து

எமைக் கண்டித்து  

அண்டத்தை 

அசைவிக்கிறாய்..


கடினமான காரமான

கணங்களையும் காலாறக் 

கடப்பதால்தான் 

கடிகாரமெனப் பெயர் 

சூடிக் கொண்டாயோ?!


-- செல்லா

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...