வாய் வழி விரியும் விந்தை!
⏲️⏱️⏰⌚️🕛🕰️🕝🕒⌚️🕰️⏰
உதயம் முதல்
மறையும் வரை
உனது பயணம்
மூன்று முட்களோடு..
திருகி விட்டாலும்..
திமிறாமல் இருந்து
முட்களின் சங்கமத்தில்
சங்கீதம் ஆகிறாய்..
ஓடியோடி
ஓங்கியடித்து
ஓங்கார ஓசையோதி
உனைத் தண்டித்து
எமைக் கண்டித்து
அண்டத்தை
அசைவிக்கிறாய்..
கடினமான காரமான
கணங்களையும் காலாறக்
கடப்பதால்தான்
கடிகாரமெனப் பெயர்
சூடிக் கொண்டாயோ?!
-- செல்லா

அற்புதம்👏👏
ReplyDeleteஅழகான வரிகள்
ReplyDelete