Monday, May 16, 2022

அம்மான்னா சும்மாவா by Geetha Krishnan

   அம்மான்னா சும்மாவா


"வருத்தப்படாதீங்க வேதவல்லி அம்மா, உங்களுக்கு கண்டிப்பா வாரிசு வேலை கிடைக்கும்", என் அம்மாவிடம் என் அப்பாவுடைய அலுவலக நண்பர் கூறினார்.

அப்பா இதய நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அம்மா மனதில் பல போராட்டங்ககள் . "ஏன் இரக்கமே இல்லாம இப்படி பேசறாங்க. நாம எப்படி மூன்று குழந்தைகளையும் கரை சேர்ப்போம்." முதல் பையன் அப்போது தான் Engineering சேர்ந்திருந்தான். இரண்டாவது பையன் பதினொன்னாவது வகுப்பு , மூன்றாவது பெண் எட்டாவது.

அம்மா பத்து வயதில் தந்தையை இழந்து, வறுமையில் வாழ்ந்து, பத்தாவதுக்கு மேல் படிக்காமல், தினக்கூலி வேலைக்குப் போய் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தம். தம்பி தங்கையை படிக்க வைத்து அவர்களுக்கு கணவரின் துணையுடன் கல்யாணமும் செய்து வைத்தார்.

உடன்பிறந்தவர்கள் என்றாலே பிரச்னை தான் வரும் என திருடனைப் பார்த்து ஒளிவதுபோல் ஒதுங்கி இல்லாமல் அவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்த அம்மா அப்பாவிடமிருந்து பல நல்ல குணங்கள் கற்றிருக்கிறேன்.

கணவருக்கு பொருளாதார உதவி செய்ய parttime வேலை பார்த்தார். அந்த காலத்தில் machine போல் machine இல்லாமல் எல்லா வேலையும் கையில் செய்தார். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க நடந்து போய் 15 நிமிஷம் வரிசையில் நின்றால் தான் கிடைக்கும், நின்று தண்ணீர் பிடித்து தொட்டி நிரப்பி, வேலை எல்லாம் முடித்து 25 நிமிடம் நடந்து bustop சென்று பஸ் பிடித்து பகுதி நேர வேலை செய்து வீடு வந்து திரும்ப வேலை செய்வார். வரும்போதே யானை போல ஞாபகம் வைத்து வீட்டுக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வருவார்.

சரி கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை நிம்மதியா இருந்தா போதும் என்று இருந்த சமயத்தில் சுனாமி போல் வந்தது அப்பா இனி பிழைக்க மாட்டார் என்ற செய்தி.

கடவுள் போல் குடும்ப டாக்டர் வந்து வேறு ஒரு ஹாஸ்பிடல் போக சொன்னதால் அப்பா உயிர் பிழைத்தார், அதற்கு நண்பர்கள், மாமா, சித்தி, அத்தை குடும்பம் ஆறுதலாக இருந்தார்கள்.

அப்பா இதய நோயால் கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது, செய்தால் மூச்சு மூச்சுத்திணறும். ஒரு குழந்தை போல் இருக்கணும் என்றதால், வீட்டு வேலை சேர்த்து வெளி வேலைகள் எல்லாம் அம்மாவே பார்த்துக்கொண்டார்.

மிக பொறுமையானவர். சிக்கனமானவரும் கூட. மாந்தோப்பு கிளியேயில் வரும் சுருளி ராஜன் போல் கஞ்சம் இல்லை. அவர் சிக்கனமாக இருந்ததால் தான் எங்கள் எல்லாருக்கும் நல்ல படிப்பு தந்து நல்ல கௌரவமாக கல்யாணம் செய்து கொடுக்கவும் முடிந்தது. சம்பந்திகளுடன் ஒரு சகோதரி போல் பழகுவார். பையனுடைய அம்மா என்ற ஒரு பந்தாவும் இருந்தது இல்லை.

நாங்கள் மூவரும் நல்லா இருப்பதை பார்த்து அப்பா, அம்மாவின் கண் முன் கண் மூடினார்.

22 வருடங்களாக அம்மா கணவர் இல்லாமல் எங்கள் ஒவ்வொரு வீட்டில் வந்து அட்ஜஸ்ட் செய்து இருப்பார். அணில் மாதிரி ஏதாவது குட்டி குட்டி வேலை செய்வார். இது வரை அவரோட புடவையை என்னை மடிக்க விட்டதில்லை, ஓடி வந்து "எனக்கு முடியாமல் போற காலத்தில் நீங்கள் என் வேலையை பண்ணுங்கள் அதுவரை நான் என் வேலையை பண்ணுவேன் இல்லைனா உடம்பு துரு பிடிச்சுடும்" என்று சொல்லுவார். தோசையோ, சப்பாத்தியோ பண்ணும்போது ஒன்னு குடுத்து இன்னொன்னு தருவதற்குள் பின்னாடி வந்து நிற்பார், நாங்கள் நடக்க வேண்டாம் என்பார். 78 வயதிலும் நாங்கள் ஏதாவது தூக்கிக் கொண்டு வந்தால் கையில் இருந்து பிடுங்கிக்கொள்வார். சின்னவங்க தானே தூக்கட்டுமே என இருந்ததே இல்லை. எந்த இடத்திலும் புது இடம் என்று உட்கார மாட்டார், கண் பார்த்து கை செய்யும் பழக்கம் உடையவர்.

பொறுமை போய் ஏதாவது யாரிடமாவது சொல்லி விட்டாலும், என்னிடம் வந்து நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்கணும் தப்பு பண்ணிட்டேன் என்பார்.

"ஏன் அம்மா, அப்பா உங்களுக்கு ஒரு குட்டி வீடும் பென்ஷனும் விட்டு போயிருக்கார், நீங்க தனியா இருக்கலாமேன்னு" என்று அப்பா போன சில நாட்களில் கேட்டேன். அதுக்கு உடனே "உடம்பு முடியாதப்போ போய் குழந்தைகள் தான் பார்த்துக்கணும்னு இருப்பதைவிட, முடியும்போதே அவர்களுக்கு சின்ன உதவி செய்து இருக்கலாமே, அதில் என்ன தப்பு. மேலும், எந்த இடத்திலேயும் எந்த வேலையும் இல்லை” என்று சொல்லுவார்.

அதே போல் நான் இப்போ சென்னையில் இருக்க வேண்டி வந்தபோது தானும் வருவேன் என்று வந்து, சென்னை வெய்யில் ஒத்துக்காது அப்படியும் எனக்கு உதவி செய்து இருந்தார்.

எங்களுடன் வெளிநாட்டில் இருக்கும்போது மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்ற வகையில், தன்னை மாற்றிக்கொண்டும் அட்ஜஸ்ட் செய்தும் இருந்து வருகிறார்கள். pizza , burger , pasta , cereal எது தந்தாலும் "நல்லா இருக்கு எனக்கு பிடிக்கும்"னு சாப்பிடுவாங்க. நான் கிண்டலுக்கு சொல்லுவேன், "ஒரு நாள் chicken கூட பிடிக்கும்னு சாப்பிடப்போறீங்கன்னு. (நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம்).

வேலைக்கு போகும் பேரன் பேத்திகளுக்கு கூட அவர்கள்தான் பேசணும் என்று இல்லாமல் இவர்களே எல்லாருக்கும் மெசேஜ் பண்ணி "எப்படி இருக்கீங்கன்னு' கேட்பாங்க.

Robot அம்மா என்று நான் கூப்பிடுவேன். ஒரு routine தினமும் அவங்களுக்கு இருக்கு, யோகா பண்ணுவது, சுலோகம் சொல்லுவது, சாயங்காலம் வாக், பாகவதம் பகவத் கீதை எழுதுவது, மூன்று இல்ல நான்கு serial பார்ப்பது, சாயங்காலம் திரும்ப 20 நிமிடம் exercise, sudoku போடுவது எங்கு இருந்தாலும் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவங்க தினமும் சளித்துக்கொள்ளாமல் செய்து அவங்களை occupiedடாக வச்சுப்பாங்க,Bore னா கிலோ என்ன விலைனு கேட்பாங்க.

A very simple person. தன் மூன்று குழந்தைகளுடனும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, ஒரே மாதிரியான, போலித்தனம் இல்லாத அன்பு மட்டுமே காட்டும் இந்த அம்மாவிற்கு நான் தலை வணங்குகிறேன்.



3 comments:

  1. அருமையான பதிவு,அம்மா ஒரு பொக்கிஷம்🙏

    ReplyDelete
  2. நீங்கள் மட்டுமல்ல கீதா, நாங்களும் அம்மாவின் செயலுக்கு தலை வணங்குகிறோம். Super amma

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...