Monday, August 11, 2025

படமும் கருத்தும் by Kiruthika and Veena

 


ஒற்றை செடியில்

 ஒற்றை மலர் 

கற்றது என்ன

கற்பது எங்கே

ஏற்றைக்கும் காதல் 

ஏற்பது சிறப்பு 

கற்பனை விரிய 

கற்சிலை போலே

உளி தாங்கி

உள்ளத்தில் நிற்க

விற்பனை இல்லை

விற்பவர் உத்தியிலும்

விற்ற பொருளும்

வெற்றிடம் கொள்ளும்

மற்றது யாவும்

மாற்றத்தக்கது என்றும்

உட்புகுந்த காதல்

வெளிக்கொணர தவிக்கும்

போதும், போதும்

என்று சொல்லா

அழியா

- Veena 

நாம் யார் ..நம் விருப்பம் என்ன..எண்ணம் என்ன..பார்வை என்ன..என்பது நமக்கு மட்டுமே தெரியும்...!..

சில சமயங்களில் 

பிறர் நம் மேல் கொண்டிருக்கும் எந்த ஒரு தவறான 

அனுமானதிற்கும் ..

நாம் பொறுப்பல்ல...

நாம் ஒன்றும் செய்ய இயலாது...

அவரவர் பார்வைக்கு அவரவரே பொறுப்பு ...!..


காதல் 

கொண்டு காத்து இருந்தேன்..

உனக்கு முன்னே 

இதோ...

கவிதை வந்து விட்டது...!..

நீ -

எப்போது ...

என்னை

புரிந்து...

வருவாயோ...!.. காதல்

மனத்தின் கண்

- Kiruthika 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...