உழைப்பின் அடையாளம்
தற்போது வெறுமையாய்
இயந்திரத்தின் வரவால்
மண் மேவிய குளம்புகள்
இளைப்பாறுகிறது
கொட்டகையில்
மனிதனுக்கு மனிதன் எதிரியல்ல
அவன் சிந்தனையும் தான்
மனைவி, பிள்ளை குட்டிகளை
காப்பாற்ற வேண்டிய கடமை
இல்லையென்றாலும்
தன் பிறவிக்காக
அயராது உழைக்கும் மாடுகள்
வேண்டுவது யாது?
எங்களையும் வாழ விடுங்கள்
இதன் பொருள் தான் என்ன?
அடிமையாய் நடத்த வேண்டாம், அதே சமயம்
எங்களை உழைப்பதிலிருந்து
விடை கொடுத்து மாற்றவும் வேண்டாம்
- Veena
வீட்டின் செல்லப்பிள்ளைகள்
உத்தரவிற்கு காத்திருக்க, கால்
பதித்த இடம் எல்லாம் பொன்
விளைய காத்திருக்க , மண்ணை
பக்குவப்படுத்த விண்
காத்திருக்க , இனத்தை பெருக்க
மண்புழுக்கள் காத்திருக்க,
விருந்தாளியாக வருவோரை
பாம்புகள் வேட்டையாட
காத்திருக்க , வியர்வை குடித்த
பயிரை வாங்க முதலாளி
காத்திருக்க, கடைசியில்
மிஞ்சியது கஞ்சிக்கு போக,
எஞ்சிய தவுடே இவர்களுக்காக
காத்திருக்கும்.
- Vidhya

No comments:
Post a Comment