Thursday, August 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 உழைப்பின் அடையாளம்

தற்போது வெறுமையாய்

இயந்திரத்தின் வரவால்

மண் மேவிய குளம்புகள் 

இளைப்பாறுகிறது 

கொட்டகையில்

மனிதனுக்கு மனிதன் எதிரியல்ல

அவன் சிந்தனையும் தான்


 மனைவி, பிள்ளை குட்டிகளை

காப்பாற்ற வேண்டிய கடமை

இல்லையென்றாலும்

தன் பிறவிக்காக

அயராது உழைக்கும் மாடுகள்

வேண்டுவது யாது?

எங்களையும் வாழ விடுங்கள்


இதன் பொருள் தான் என்ன?


அடிமையாய் நடத்த வேண்டாம், அதே சமயம்

எங்களை உழைப்பதிலிருந்து

 விடை கொடுத்து மாற்றவும் வேண்டாம்

- Veena 

வீட்டின் செல்லப்பிள்ளைகள்

உத்தரவிற்கு காத்திருக்க, கால்

 பதித்த இடம் எல்லாம் பொன்

 விளைய காத்திருக்க , மண்ணை

 பக்குவப்படுத்த விண்

 காத்திருக்க , இனத்தை பெருக்க

 மண்புழுக்கள் காத்திருக்க,

 விருந்தாளியாக வருவோரை

 பாம்புகள் வேட்டையாட

 காத்திருக்க , வியர்வை குடித்த

 பயிரை வாங்க முதலாளி

 காத்திருக்க, கடைசியில்

 மிஞ்சியது கஞ்சிக்கு போக,

 எஞ்சிய தவுடே இவர்களுக்காக 

 காத்திருக்கும்.

- Vidhya 

 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...