Solitude -அழகிய தனிமை!
Wings exist to set her free..
Wings exist to let her go..
Wings exist to prove power..
Yet immersed in SOLITUDE✨
-Akhila
எனக்கென எதுவும் தேவையில்லை இந்த சிறகுகள் பாரமாக மாறாத வரை..
- Vidhya
Veena Shankar:
சிறகுகள் முளைத்த பின் காலத்தால் அது அழியும் வரை வானமே உலகம்
சிறகுகள் முளைத்த பின்னும்
சிறையில் முடங்குவது ஏன்?
சிறகுகள் உனக்கு பாரமில்லை அது வளர்ந்தாலும்
வாழ்வில் எதிர்நீச்சல் போடும்
பெண்ணின் பிம்பமாய்
நீ வானை வசமாக்கு
ஏதும் விரிய விரியவே அதன் ஆழம் தெரியும்
ஏதும் விடியவே இருள் விலக வேண்டும்
படமும் கருத்தும் அப்படியே!
என்றும் காக்க வேண்டும் அமைதி
இயலாமையில் அடைவது அசதி
குற்றத்தை வளர்ப்பதால் எப்போதும் அவதி
ஆக்கத்தின் முடிவே இறுதி
மனதில் கொள்ள வேண்டும் உறுதி
வெற்றி பெற வேண்டும் உண்மை தன்மை கருதி
குறிக்கோள் அடையும் வரை அடங்க கூடாதது குருதி
வாழ்வில் தவறி விழும் இடம் யாவும் சகதி
இசையில் லயிக்க தேவை சுருதி
வேண்டிய இடத்தில் வளர்ப்பது தகுதி
அழகு என்பது அறிவின் ஓர் பகுதி
அடுத்தவர் குற்றத்தை ஏற்க வேண்டுவது மறதி
அறிவோடு அழகு என்பதே யுவதி

No comments:
Post a Comment