இளங்காளைகளைக் சுண்டி இழுக்கும் பார்வையா?
இல்லை
அவள் மேல் பார்வையும் கலையாமல் செல்லும் காளைகளா?
வில் போல் வளையும் புருவங்களா?
இல்லை
புருவங்களும் வில் போல் கூர்மை ஆனதா?
புன்னகைப்பது விழிகளா?
இல்லை
பிரிந்த உதடுகளா?
கவினுற அழைப்பது உதடுகளா ?
இல்லை
மண்டியிட வைக்கும் விழிகளா?
நாசிகள் இருப்பதும் சுவாசிக்க மட்டுமா? இல்லை
காண்போரின் திணறலுக்கு மருந்தா?
இமைகள் மூடினால் காட்சிக்கு வேலியா?
இல்லை
வேலியே விழிக்கு அழகை கூட்டவா?
இரவில் வரும் வெண்மதியா?
இல்லை
பூமியின் வெண்மதியும் இவளா?
கனவில் வரும் காட்சியா? இல்லை
காட்சிகள் எல்லாம் கனவாகும் இவளா?

No comments:
Post a Comment