ஏதேதோ செய்ய நினைத்து கொண்டு இருக்கையில்...
வேறொன்று
குறுக்கே வர...
இதை முதலில்
செய்து விட்டு ..
அதை பிறகு செய்யலாம் என்று நினைக்கையில்...
இதேபோல் ..
நேற்று பின்னுக்கு தள்ளிய வேலை முன்னுக்கு வர..!..
இப்போது -
நான்
இன்றைய இதை செய்யவா...
இல்லை -
நேற்றைய
அதை செய்யவா..
என்று என் மண்டை ..
சூடேற ...
கடைசியில்..
தலை வலி..
வழியில்..
இடைமறிக்க...
அட போ...
இதை அதை என
எதையும்..
நாளையே..
சேர்த்து செய்து கொள்ளலாம்...
என
குப்புற படுத்து
உறங்கி கொண்டு
இருக்கிறது ..
என் சின்ன
மூளை...!..
இருந்தும்..
பாருங்கள்..
உறக்கத்தில் கூட
இதை மட்டும்
விடாமல்
எழுதி
கொண்டு இருக்கிறது என் மனம்...
ஏனெனில்..
இது வேலை அல்ல ..
ஆவல்..
ஆக்கம்...
ஆசை...!!....
Kiruthika
என்றும் காக்க வேண்டும் அமைதி
இயலாமையில் அடைவது அசதி
குற்றத்தை வளர்ப்பதால் எப்போதும் அவதி
ஆக்கத்தின் முடிவே இறுதி
மனதில் கொள்ள வேண்டும் உறுதி
வெற்றி பெற வேண்டும் உண்மை தன்மை கருதி
குறிக்கோள் அடையும் வரை அடங்க கூடாதது குருதி
வாழ்வில் தவறி விழும் இடம் யாவும் சகதி
இசையில் லயிக்க தேவை சுருதி
வேண்டிய இடத்தில் வளர்ப்பது தகுதி
அழகு என்பது அறிவின் ஓர் பகுதி
அடுத்தவர் குற்றத்தை ஏற்க வேண்டுவது மறதி
அறிவோடு அழகு என்பதே யுவதி
- Veena

No comments:
Post a Comment