ஓர் வினாவிற்கு பல விடைகள் உண்டு
வாழ்வில் வளைந்து போக
சொல்லியே நம்மை
உணர்த்துகிறது இந்த
கேள்விக்குறியும் தானுமே வளைந்து
கேள்விக்குறியில் வளைவும் உண்டு
அதனடியில் ஓர் புள்ளியும் உண்டு
எனில் எல்லா கேள்விகளுக்கும்
விடையும் உண்டு முற்றுப்புள்ளியாய்
விடை தெரியா வினாக்கள் பல
அதற்கு
விடை தேடி சென்றால்
விலை மதிப்பில்லா நேரம் வீணாகும்
வினா நம்மை சீர்த்திருத்தவே
அன்றி
முற்றுப்புள்ளி அல்ல அது
வினாக்களுக்கு ஒருசில நேரம்
பல விடைகளும் கிடைக்கும்
அவரவர் சூழ்நிலை பொறுத்து
வினவுவதில் தெளிவு வேண்டும்
விடையளிப்பதில் அதை விட தெளிவு வேண்டும்
- Veena
கேள்விகளின் பிறப்பிடமே சிந்தனையின் ஆரம்பம்..
கேள்விகளை முடக்கினால் எதற்கும் தலையாட்டும் மூடர் கூட்டத்தில் சேருவோம்..
கேள்விகளை வரவேற்போம் பதில் தெரியாவிட்டாலும் தானாக பிறக்கும்,இல்லையேல் ஒரு விடையற்ற செயல் தானாக முடங்கும்!
அர்த்தமற்ற கேள்வி ஒலிக்கும் இடத்தை கூர்ந்து நோக்கினால் ஒரு வழி பிறக்கும்..
விடை தெரியாமல் அலைவதைவிட உரிய இடத்தில் கேட்பதே மேல்!
- Vidhya

No comments:
Post a Comment