Saturday, August 23, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஓர் வினாவிற்கு பல விடைகள் உண்டு

வாழ்வில் வளைந்து போக

சொல்லியே நம்மை

உணர்த்துகிறது இந்த

கேள்விக்குறியும் தானுமே வளைந்து


 கேள்விக்குறியில் வளைவும் உண்டு

அதனடியில் ஓர் புள்ளியும் உண்டு

எனில் எல்லா கேள்விகளுக்கும் 

விடையும் உண்டு முற்றுப்புள்ளியாய்


 விடை தெரியா வினாக்கள் பல

அதற்கு 

விடை தேடி சென்றால்

விலை மதிப்பில்லா நேரம் வீணாகும்

வினா நம்மை சீர்த்திருத்தவே

அன்றி 

முற்றுப்புள்ளி அல்ல அது

வினாக்களுக்கு ஒருசில நேரம்

பல விடைகளும் கிடைக்கும்

அவரவர் சூழ்நிலை பொறுத்து


 வினவுவதில் தெளிவு வேண்டும்

விடையளிப்பதில் அதை விட தெளிவு வேண்டும்

- Veena 

கேள்விகளின் பிறப்பிடமே சிந்தனையின் ஆரம்பம்..

கேள்விகளை முடக்கினால் எதற்கும் தலையாட்டும் மூடர் கூட்டத்தில் சேருவோம்..

கேள்விகளை வரவேற்போம் பதில் தெரியாவிட்டாலும் தானாக பிறக்கும்,இல்லையேல் ஒரு விடையற்ற செயல் தானாக முடங்கும்!

அர்த்தமற்ற கேள்வி ஒலிக்கும் இடத்தை கூர்ந்து நோக்கினால் ஒரு வழி பிறக்கும்..

விடை தெரியாமல் அலைவதைவிட உரிய இடத்தில் கேட்பதே மேல்! 

- Vidhya 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...