மனங்கள் காதல் தீயால் பற்றிக்கொள்ள
இனங்கள் கொண்டு அவர்களை விலக்கி நிற்க
பற்றிய மனங்களின் உயிர்கள்
இங்கே தீயால் பற்ற வைக்கப்பட்டன
மனித இதயத்தை தாங்கும் கரங்கள்
பின் அக்னியின் வசம்
ஒப்படைப்பதும் ஏனோ?
கரங்கள் தாங்குவது விளக்கல்ல, இதயம்
விளக்கு அணையும் நேரத்திற்குள்
திருமண பந்தம் என்னும் உறவு
முடிந்து விடுவதும் ஏனோ?
காட்சிக்காக வைக்கப்பட்ட இதயம் அல்ல இது
நடைமுறையில் சகிப்புத்தன்மை
குறைந்ததால் எரிந்த இதயம் இது
- Veena
தீயாக எரியும் இதயம் உந்தன்
கரத்தில் பட்டவுடன், நெருப்பு
துகள்கள் தங்கமாக மின்னுதே,
ஒவ்வொரு துகளிலும் பொதிந்த
இதயம் ,காற்றில் மிதக்குதே...
- Vidhya

No comments:
Post a Comment