Wednesday, August 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



மனங்கள் காதல் தீயால் பற்றிக்கொள்ள

இனங்கள் கொண்டு அவர்களை விலக்கி நிற்க

பற்றிய மனங்களின் உயிர்கள்

இங்கே தீயால் பற்ற வைக்கப்பட்டன


மனித இதயத்தை தாங்கும் கரங்கள்

பின் அக்னியின் வசம் 

ஒப்படைப்பதும் ஏனோ?


 கரங்கள் தாங்குவது விளக்கல்ல, இதயம்

விளக்கு அணையும் நேரத்திற்குள்

திருமண பந்தம் என்னும் உறவு

முடிந்து விடுவதும் ஏனோ?


 காட்சிக்காக வைக்கப்பட்ட இதயம் அல்ல இது

நடைமுறையில் சகிப்புத்தன்மை

குறைந்ததால் எரிந்த இதயம் இது

- Veena 

தீயாக எரியும் இதயம் உந்தன்

 கரத்தில் பட்டவுடன், நெருப்பு

 துகள்கள் தங்கமாக மின்னுதே,

ஒவ்வொரு துகளிலும் பொதிந்த

 இதயம் ,காற்றில் மிதக்குதே...

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...