Tuesday, August 26, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 தாகம் தீர்த்தது இங்கே

 தண்ணீரா இல்லை நண்பனா?


 ஒருவன் கொடுக்க ஊற்றாய்

ஒருவன் அடிக்க நண்பனாய்

ஒருவன் குடிக்க தாகம் உள்ளவனாய் 

ஒருவன் நிலைக்க மரமாய்

தாகம் தீர்த்த கையோடு 

பசுமையும் வளர்ந்தது

ஊற்றும் பெருகியது

எவர் செயலாலே இவை

தாகம் கொண்டதாலா ?

ஊற்று கொண்டதாலா ?

அடிக்குழாயை வைத்ததாலா?

அதை இயக்க வைத்ததாலா?

இது ஏதும் இல்லை

மாசற்ற நட்பே உண்மை!

- Veena 


ஆனந்தத்தின் எல்லை..

துள்ளுற மனசு கண்ணில்

 தெரியுது, கள்ளம் கபடமற்ற

 துள்ளல் ,அந்த பம்பை அடிக்கும்

 போது எல்லையில்லா ஆனந்தம்,

அடிப்பம்பின் சப்தமே அடிக்க

 மீண்டும் தூண்டும்!

- Vidhya 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...