புல்லாங்குழல் ஊதும் கண்ணன் இங்கே
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறான்
பெண்ணின் காதோடு
மாயக் கண்ணன் மாயமாகி போனான்
தங்கத்தின் விலை ஏற்றத்தாலே
இருந்தாலும் இடம் கிடைத்தது
பெண்ணின் காதோரத்தில்
அவள் கொண்ட காதலால்
கண்ணனிடம் மட்டுமல்ல
தங்கத்தின் ஈர்ப்பாலும்
மங்கையின் கூந்தல் அலையில்
வெளிப்பட்ட காற்றால்
ஆடின இங்கே அவள் தோடு
கண்ணனும் மயங்கி லயித்து எடுத்தான்
அவன் குழலை
அவன் பக்கத்தில்
இருப்பது தானென்று
நினைத்தாள் மங்கையும்
அவன் மீது கொண்ட காதலால்
ஏமாற்றம் யாருக்கு?
மங்கையின் கூந்தலை
வளியாய் நினைத்த கண்ணனுக்கா ?
அவன் மெய் என நம்பிய மங்கைக்கா?
காதில் ஓர் தங்கத்தோடு ஓர் தங்கத் தோடு

No comments:
Post a Comment