Sunday, August 17, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


புல்லாங்குழல் ஊதும் கண்ணன் இங்கே

ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறான்

பெண்ணின் காதோடு


மாயக் கண்ணன் மாயமாகி போனான்

தங்கத்தின் விலை ஏற்றத்தாலே

இருந்தாலும் இடம் கிடைத்தது

பெண்ணின் காதோரத்தில் 

அவள் கொண்ட காதலால்

கண்ணனிடம் மட்டுமல்ல

தங்கத்தின் ஈர்ப்பாலும்


 மங்கையின் கூந்தல் அலையில்

வெளிப்பட்ட காற்றால்

ஆடின இங்கே அவள் தோடு

கண்ணனும் மயங்கி லயித்து எடுத்தான்

அவன் குழலை 

அவன் பக்கத்தில்

இருப்பது தானென்று

நினைத்தாள் மங்கையும்

அவன் மீது கொண்ட காதலால் 

ஏமாற்றம் யாருக்கு?

மங்கையின் கூந்தலை 

வளியாய் நினைத்த கண்ணனுக்கா ? 

அவன் மெய் என நம்பிய மங்கைக்கா?


 காதில் ஓர் தங்கத்தோடு ஓர் தங்கத் தோடு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...