Monday, August 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



கூர் முனை கொண்ட எதுவும் தகர்க்கும் எதையும்

எழுதும் கருத்தில் உள்ள ஆழம்
எழுது பொருளை வைத்து அல்ல
எதுபவரின் ஆளுமையை பொறுத்தே

 எழுதுகோல் கூர்மை பெறுவது 
அதன் சில பாகங்களின் தியாகத்தாலே

ஓர் கருத்தின் வெளிப்பாட்டிற்காக
எழுத்து கொண்டது தான் விடுதலை
எழுதுகோல் வாயிலாக

ஏர் முனையின் 
கூர் முனை போலே
ஓர் முனை
பார் முழுதும் திரும்பி
பார் என்றது
கார்மேகம் போல் வண்ணம்
சீர்படுத்த வந்தது கருத்தாலே
ஈர்த்ததும் எழுத்தாலே
ஊர் முழுக்க பேச வைக்கும் திறமை 
சோர்வடையா 
தூர்வாரப்பட்ட கிணறு போலே
ஊற்றெடுக்கும்
தேர் போல் பவனி வந்து
நீரோட்டம் போல் வளைந்து
நேர்பட பேசியும்
சீர் கொள்ள செய்யும்
போர் முனை வாள் போலே வெற்றி கொண்டு
மார் தட்டி ஆமோதிக்க செய்யும்
தேர்தல் களம் காணா 
தனியொருவனின் ஆளுமை 
இங்கே எப்போதும்

- Veena 

கத்தியை விட கூர்மையான முனை அதில் வடிக்கும் வார்த்தைகள் உண்டாக்கும் வடு எதையும் கொண்டு அழிக்க முடியாத ஆயுதம் !

கல்வி எனும் வேர் பல கோட்டையை தாண்டி ,பல சாக்கடையை மிதித்து, பீறிட்டு வரும் விருட்சம், அதில் ஊஞ்சல் இட்டு விளையாட வாருங்க, வேலி இட அல்ல!

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...