எழுதும் கருத்தில் உள்ள ஆழம்
எழுது பொருளை வைத்து அல்ல
எதுபவரின் ஆளுமையை பொறுத்தே
எழுதுகோல் கூர்மை பெறுவது
அதன் சில பாகங்களின் தியாகத்தாலே
ஓர் கருத்தின் வெளிப்பாட்டிற்காக
எழுத்து கொண்டது தான் விடுதலை
எழுதுகோல் வாயிலாக
ஏர் முனையின்
கூர் முனை போலே
ஓர் முனை
பார் முழுதும் திரும்பி
பார் என்றது
கார்மேகம் போல் வண்ணம்
சீர்படுத்த வந்தது கருத்தாலே
ஈர்த்ததும் எழுத்தாலே
ஊர் முழுக்க பேச வைக்கும் திறமை
சோர்வடையா
தூர்வாரப்பட்ட கிணறு போலே
ஊற்றெடுக்கும்
தேர் போல் பவனி வந்து
நீரோட்டம் போல் வளைந்து
நேர்பட பேசியும்
சீர் கொள்ள செய்யும்
போர் முனை வாள் போலே வெற்றி கொண்டு
மார் தட்டி ஆமோதிக்க செய்யும்
தேர்தல் களம் காணா
தனியொருவனின் ஆளுமை
இங்கே எப்போதும்
- Veena
கத்தியை விட கூர்மையான முனை அதில் வடிக்கும் வார்த்தைகள் உண்டாக்கும் வடு எதையும் கொண்டு அழிக்க முடியாத ஆயுதம் !
கல்வி எனும் வேர் பல கோட்டையை தாண்டி ,பல சாக்கடையை மிதித்து, பீறிட்டு வரும் விருட்சம், அதில் ஊஞ்சல் இட்டு விளையாட வாருங்க, வேலி இட அல்ல!
- Vidhya

No comments:
Post a Comment