Monday, March 22, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"உணவு" by Vidhya Nivash

 

உணவு எது உணவு???

எது ?எது ?உணவு கடுமையான உழைப்பிற்குப் பிறகு , பசித் தூண்டப்பட்டு, நேரம் காலம் பார்க்காமல் கிடைத்த உணவை உடலும் மனமும் விரும்பி உண்ணும் உணர்வைத் தூண்டும் உணவே நம் உடலையும்,மனதையும் வளர்க்கும்..


இதற்கு மாறாக இன்று நம் கண்ணால் தூண்டப்பட்டு ,நாக்கில் எச்சி ஊறி எந்நேரமும் எதைக் கண்டாலும் உண்ணத் தூண்டும் உணவா அல்லது உணர்ச்சி தூண்டிகளா???


சரியான உணவை நாம் உட்கொள்ளும் பொழுது மனமும் உடலும் இணைந்து செயல்படும் நிம்மதியான தூக்கம் வரும், இன்று வரும் துரித உணவுகள் நம் உடலையும் ,மனதையும் என்ன செய்கின்றன???


பசித்து,ரசித்து, ருசித்து உண்ணும் பொழுது நம்மை அறியாமல் கண்ணில் இருந்து நீர் வரும் ,உணவை படைத்தவரை மனம் வாழ்த்தும்!!!

உன்னதமான உணர்வை தரும் உணவு...

அளவிற்கு மிஞ்சி குப்பையில் கொட்டும் உணவு !!!அதற்கே

எங்கோ ஒரு சிறு பிள்ளை கை ஏந்தி கொண்டிருப்பாள் ஒரு ஜான் வயிற்றுப் பசிக்காக...


எண்ணிலடங்கா உணவு விரயத்தை பார்க்கும் பொழுது மனம் கலங்குகிறது ...



6 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...