Friday, May 28, 2021

யாதென்று by Veena Shankar

 


யாதென்று??


வயலுக்கு தெரியாது தான் விளைவிப்பது யாதென்று

மலருக்கு தெரியாது தான் எங்கே சூடப்படுவோம் என்று

கருவுக்கு தெரியாது தான் யாரென்று

மரத்திற்கு தெரியாது தான் எப்படி உருமாறுவோம் என்று

கடலுக்கு தெரியாது தன்னுள் இருப்பது யாதென்று

மலைக்கு தெரியாது மழை நீரை சேமிப்பது எவ்வாறு என்று

மனிதனுக்கு தெரியும்

வயலை வளமாக்க

மலரை ரசிக்க

கருவை சுமக்க

மரத்தை பொருளாக்க 

கடலை சுகமாக்க

மலையை மடுவாக்க

ஆனால் மனிதனுக்கு தெரியாது

மனிதநேயத்தை வளர்க்க

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...