அளவோடு வாங்கு.
ஆசைக்காக வாங்காதே.
இனிப்புகளை அதிகம் வாங்காதே.
ஈ மொய்த்ததை வாங்காதே.
உனக்கு தேவையானதை வாங்கு.
ஊரார் சொல்லுவது எல்லாம் வாங்காதே.
எதையும் அளவிற்கு மீறி வாங்காதே.
ஏமாற்றுபவரிடம் வாங்காதே.
ஐயம் தோன்றினால் வாங்காதே.
ஒருவர் இடமே வாங்காதே.
ஓராயிரம் முறை யோசித்து தேவையானால்
மட்டும் வாங்கு.
ஔடதம் அதாவது மருந்து வாங்க அடிக்கடி
போகாதே.
அஃது தான் உனக்கு நலமாம்.

அருமை அம்மா
ReplyDeleteகவிஞனுக்கு வயதே தடையில்லை. அருமையான படைப்பு
ReplyDelete